பயணிகளே அலர்ட்… சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. டைமிங் இதுதான்!

Chennai Mtero Rail : 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதியான நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகளே அலர்ட்... சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. டைமிங் இதுதான்!

சென்னை மெட்ரோ ரயில்

Updated On: 

14 Aug 2025 13:39 PM

சென்னை, ஆகஸ்ட் 14 :  சென்னை மெட்ரோ ரயில் (Chennai Metro Rail) சேவையில் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதியான நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சுதந்திர தினத்தையொட்டி, (Independence Day) 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதியான நாளை ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக இருப்பது மெட்ரோ ரயில்கள். சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக, வேலை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்ப, ஒவ்வொரு 2 முதல் 5 நிமிடத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதற்கு ஏற்ப சலுகைகளையும் அறிவித்து வருகிறதுஇப்படியான சூழலில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதியான நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனால், அனைத்து கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Also Read : தொடர் விடுமுறை.. எகிறிய ஆம்னி பேருந்து கட்டணம்… பயணிகள் பெரும் அவதி!

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்


அதாவது, சென்னையில் மெட்ரோ ரயில்கள் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி (நாளை) ஞாயிறு அட்டவணைப்படும் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (15-08-15) ஞாயிறு அட்டவணை பின்பற்றப்படும். இதனால், காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை குறிப்பிட்ட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

Also Read : தொழிலாளி மூக்கை கடித்த ராட்வீலர் நாய்.. பூந்தமல்லி அருகே நடந்த பரபரப்பு சம்பவம்..

நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கு இயக்கப்படும். காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்படும். மேலும், இரவு10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.