AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. 100 டிகிரியை கடந்து பதிவாகும் வெப்பநிலை.. வானிலை எப்படி இருக்கும்?

மே 20, 2026: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மே 20 ஆம் தேதி ஆன இன்று, நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், […]

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. 100 டிகிரியை கடந்து பதிவாகும் வெப்பநிலை.. வானிலை எப்படி இருக்கும்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 May 2026 06:25 AM IST

மே 20, 2026: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மே 20 ஆம் தேதி ஆன இன்று, நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடரும் மழை:

இதுதவிர, ஏனைய தமிழகம் முழுவதிலும் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை நகரைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை முதல் லேசான மழை வரை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக வெப்பநிலையின் தாக்கமும் கணிசமாக குறைந்து காணப்படுகிறது.

மேலும் படிக்க: டெல்லி முதல் குருகிராம் வரை… உலகின் அதிக வெப்பமான 100 நகரங்களும் இந்தியாவில்..

மேலும், நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 22 மற்றும் 23 ஆம் தேதிகளைப் பொருத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

100 டிகிரி கடந்து பதிவாகும் வெப்பநிலை:

வெப்பநிலை கடந்த சில நாட்களாக குறைந்து காணப்பட்டாலும், வரக்கூடிய நாட்களில் ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் மழை பெய்து வந்தாலும், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்த வெப்பநிலை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் திருத்தணியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, வேலூரில் 38.7 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 38.1 டிகிரி செல்சியஸ், மதுரையில் 38 டிகிரி செல்சியஸ், கரூரில் 37.2 டிகிரி செல்சியஸ் மற்றும் ஈரோட்டில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொருத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 39.6 டிகிரி செல்சியசும், நுங்கம்பாக்கத்தில் 39.1 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us