AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மத்திய அரசுப் பணியிடங்களுக்கான பிரம்மாண்ட அறிவிப்பு… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Central Government Recruitment 2026: மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் எம்.டி.எஸ், ஸ்டெனோகிராபர் மற்றும் செவிலியர் உள்ளிட்ட 3,700-க்கும் மேற்பட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 10-வது வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்புகள் குறித்த கூடுதல் விவரங்களை அந்தந்தத் துறைகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விரிவாகத் தெரிந்துகொண்டு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு இளைஞர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மத்திய அரசுப் பணியிடங்களுக்கான பிரம்மாண்ட அறிவிப்பு… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
வேலைவாய்ப்புImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 27 Apr 2026 10:30 AM IST

இந்திய மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்புகள் இந்த வாரம் வெளியாகியுள்ளன. குறிப்பாக பணியாளர் தேர்வாணையம் (SSC), பணத்தாள் அச்சகம் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. பத்தாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கும் வகையில் இந்த அறிவிப்புகள் அமைந்துள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் காலக்கெடு முடிவதற்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SSC Phase-XIV: 3003 பல்வேறு வகைப்பட்ட பணியிடங்கள்

மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு மாபெரும் வாய்ப்பாக SSC Phase-XIV/2026 அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 3003 காலியிடங்கள் உள்ளன. எம்.டி.எஸ் (MTS), இளநிலை உதவியாளர், நர்சிங் ஆபீசர், மருந்தாளுநர், ஓட்டுநர் மற்றும் ஆய்வக உதவியாளர் எனப் பல்வேறு தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பணியிடங்கள் இதில் அடங்கும். 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. விண்ணப்பிக்கக் கடைசி நாள் மே 04, 2026 ஆகும்.

பணத்தாள் அச்சகத்தில் (Nashik) தொழில்நுட்பப் பணியிடங்கள்

நாசிக் நகரில் அமைந்துள்ள மத்திய அரசின் பணத்தாள் அச்சடிக்கும் தொழிற்சாலையில் (Currency Note Press) காலியாக உள்ள 534 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் டெக்னீஷியன், சூப்பர்வைசர் மற்றும் ஆர்ட்டிஸ்ட் போன்ற பதவிகளுக்கு ஐடிஐ (ITI), டிப்ளோமா, பி.இ/பி.டெக் மற்றும் கலைத் துறை சார்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக அனுபவம் இல்லாத புதியவர்களுக்கும் (Freshers) இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 19, 2026 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெனோகிராபர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பணிகளுக்கான அறிவிப்பு

பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் ஸ்டெனோகிராபர் கிரேடு ‘C’ & ‘D’ பிரிவில் 731 பணியிடங்களும், இந்தி மொழிபெயர்ப்பாளர் (JHT/JTO) பிரிவில் 84 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. 12-ஆம் வகுப்பு முடித்து தட்டச்சுத் தகுதி பெற்றவர்கள் ஸ்டெனோகிராபர் பணிக்கும், முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் மொழிபெயர்ப்பாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்க மே 15 வரையிலும், மொழிபெயர்ப்பாளர் பணிக்கு மே 14  வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Also Read: சித்திரை திருவிழா.. மதுரையில் போக்குவரத்து மாற்றம்.. வாகன ஓட்டிகளுக்கு புதிய நடைமுறை!

சென்னை மற்றும் அருவங்காடு பாதுகாப்புத் துறை வேலைவாய்ப்புகள்

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான ஆவடி (AVNL) மற்றும் நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையிலும் (Cordite Factory) வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சென்னையில் மருந்தாளுநர் மற்றும் செவிலியர் உதவியாளர் உள்ளிட்ட 9 பணியிடங்களுக்கும், அருவங்காடில் மனிதவளம் மற்றும் நிதித்துறையில் 12 திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எம்பிஏ (MBA) மற்றும் நர்சிங் முடித்தவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இவை தவிர, UPSC, BEML மற்றும் NMDC நிறுவனங்களிலும் பொறியியல் மற்றும் அறிவியல் சார்ந்த உயர் பதவிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இந்த வேலைவாய்ப்புகள் குறித்த கூடுதல் விவரங்களை அந்தந்தத் துறைகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விரிவாகத் தெரிந்துகொண்டு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு இளைஞர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow Us