AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அமமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. டிடிவி தினகரன் கொடுத்த விளக்கம்..

தான் வரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்ற அதிரடி முடிவை அறிவித்துள்ளார். தொடர்ந்து, பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் நிலைத்திருக்க அவர் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கலாம். அதை பற்றி நான் கருத்து சொல்ல முடியாது என்று கூறினார்.

அமமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. டிடிவி தினகரன் கொடுத்த விளக்கம்..
டிடிவி தினகரன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 23 Feb 2026 11:54 AM IST

மதுரை, பிப்ரவரி 23: தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பாஜகவுடன் பேசுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழக அரசியலில் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைவர்களின் கூட்டணி முடிவுகளும், தொகுதி பங்கீட்டுக் கணக்குகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. அந்தவகையில், தற்போதைய அரசியல் சூழல், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிலைப்பாடு குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அவ்வாறு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தேமுதிக திமுகவுடன் கூட்டணி அமைத்தது. தொடர்ந்து, ராமதாஸ் தரப்பு கூட்டணி முடிவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க: வேலூர் தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டம் – கடைசி நேரத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு

தேர்தல் முடிவும் தனிப்பட்ட நிலைப்பாடும்:

இந்நிலையில், மதுரையில் நேற்று செய்தியாளர்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தான் வரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்ற அதிரடி முடிவை அறிவித்துள்ளார். தொடர்ந்து, பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் நிலைத்திருக்க அவர் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கலாம். அதை பற்றி நான் கருத்து சொல்ல முடியாது.

அய்யப்பன் எம்எல்ஏ பேசியதற்கு கண்டனம்:

ஆனால் சட்டமன்றத்தில் அவருடைய ஆதரவு பெற்ற அய்யப்பன் எம்எல்ஏ பேசிய பேச்சு கோடிக்கணக்கான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் மனதை காயப்படுத்தி உள்ளது. சட்டமன்றத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார் என அய்யப்பன் எம்எல்ஏ கூறியது மிகவும் கண்டனத்துக்குரியது. பன்னீர்செல்வம் இதுவரை பகடைக்காய் பார்த்தது புலியாக இருந்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

பாஜகவுடன் இணைந்து அதிமுகவுடன் கூட்டணி:

இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற பிரதமர் மோடி உழைத்து வருகிறார். தற்போது இந்தியா முன்னேறி இருப்பதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடியின் நல்லாட்சி தான். நாங்கள் என்டிஏ(தேசிய ஜனநாயக) கூட்டணியில் இணைந்துள்ளோம். இதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். அதாவது பாஜகவுடன் இணைந்து, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். 1999ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஜெயலலிதா சொன்னது உண்மை தான். ஆனால், 2004-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அதிமுக இணைந்தது.

மேலும் படிக்க: விசில் அடிக்காவிட்டால் உதைப்பேன் – தவெக நிர்வாகியின் பேச்சால் பரபரப்பு

திமுகவை வீழ்த்துவதே நோக்கம்:

ஒவ்வொரு காலகட்டத்திலும் தலைவர்கள் ஒரு முடிவை எடுப்பார்கள். தற்போது திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பாஜகவுடன் பேசுவோம். அதற்கான நேரம் இருக்கிறது. தற்போது கூட்டணி பலமாக இருக்கிறது. நிச்சயம் திமுகவை வீழ்த்துவோம் என்று அவர் கூறினார்.