RCB Victory Parade: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் பறிபோன உயிர்கள்.. பிசிசிஐ கடும் கட்டுப்பாடு விதிப்பு!
IPL Safety Guidelines: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் ஐபிஎல் வெற்றி அணிவகுப்பில் ஏற்பட்ட துயர சம்பவத்தைத் தொடர்ந்து, பிசிசிஐ 3 பேர் கொண்ட குழுவை அமைத்து புதிய பாதுகாப்பு விதிகளை அறிவித்துள்ளது. இனிமேல், வெற்றி கொண்டாட்டங்களை 3-4 நாட்களுக்குப் பிறகுதான் நடத்த அனுமதி, முறையான அனுமதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் பொருந்தும்.

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்
கடந்த 2025 ஜூன் 3ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல்லில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால், அனைத்து பெங்களூரு ரசிகர்களும் தங்கள் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு, கோப்பையை வென்றதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த வெற்றியைக் கொண்டாட, பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் (M.Chinnaswamy Stadium) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2025 ஜூன் 4ம் தேதி வெற்றி அணிவகுப்பை அறிவித்தது. இந்த அறிவிப்பை வெளியிட்டபோது, பலர் சின்னசாமி ஸ்டேடியத்தில் அதிக எண்ணிக்கையில் கூடினர். அதிகளவில் கூட்டம் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். இது மட்டுமல்லாமல், பலர் காயமடைந்தனர். இப்போது பிசிசிஐ இந்த விவகாரத்தில் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா முக்கிய முடிவு:
பாராட்டு விழா எதிர்காலத்தில் சுமூகமாக நடைபெறுவதையும், யாருக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக பிசிசிஐ 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இனிமேல் இந்த விதி அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதை தீவிரமாகவும் எடுத்துகொண்டது.
பிசிசிஐ வெளியிட்ட முக்கிய விதிகள்:
Breaking: BCCI forms a panel comprising Devajit Saikia, Rajeev Shukla and Prabhtej Bhatia to formulate guidelines for IPL franchises so that tragedies like the recent one in Bengaluru do not recur. @BCCI @RCBTweets#rcbvictoryparade
— Vijay Tagore (@vijaymirror) June 14, 2025
- கோப்பையை வென்ற 3 அல்லது 4 நாட்களுக்குள் எந்த அணியும் கொண்டாடவோ அல்லது அணி வகுப்பையோ நடத்தக்கூடாது.
- ஒரு நிகழ்வை அவசரமாகவும், ஒழுக்கக்கேடாகவும் கொண்டாட அனுமதிக்கப்படாது.
- ஐபிஎல்லில் எந்த அணியாக இருந்தாலும், இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்திடமிருந்து எழுத்துப்பூர்வமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைக்கும் வரை, அந்த அணியால் எந்தவொரு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய முடியாது.
- நிகழ்ச்சியின்போது கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
- அனைத்து இடங்களிலும் பல அடுக்கு பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அது முடிந்த பிறகும் அதுவே கடைபிடிக்கப்பட வேண்டும்.
- ஒரு நிகழ்வு திட்டமிடப்பட்ட போதெல்லாம், வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
- அந்த மாநில அரசு மற்றும் காவல்துறையிடம் அனுமதி பெறும் வரை நிகழ்வு ஏற்பாடு செய்யப்படாது.
- கொண்டாட்டத்தை சட்டப்பூர்வமாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு உரிய நிர்வாகத்திடம் இருந்தும், சட்ட அமலாக்க நிறுவனங்களிடமிருந்தும் முறையான அனுமதி பெறுவது முக்கியம்.