India vs England 1st Test: ஐசிசி விதிகளை மீறினாரா கேப்டன் சுப்மன் கில்..? தடை விதிக்க வாய்ப்பா..?

Shubman Gill's Black Socks: ஹெடிங்லீ டெஸ்டின் முதல் நாளில், இந்திய கேப்டன் சுப்மன் கில் 127 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். ஆனால், அவர் அணிந்திருந்த கருப்பு சாக்ஸ் ஐசிசி விதிகளை மீறியதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி விதிகளின்படி, வெள்ளை, கிரீம் அல்லது வெளிர் சாம்பல் சாக்ஸ் மட்டுமே அனுமதி. விதி மீறலுக்கு அபராதம் அல்லது தடை விதிக்கப்படலாம். கில்லின் செயல் வேண்டுமென்றே நடந்ததா என்பதை நடுவர் ஆராய்வார்.

India vs England 1st Test: ஐசிசி விதிகளை மீறினாரா கேப்டன் சுப்மன் கில்..? தடை விதிக்க வாய்ப்பா..?

சுப்மன் கில்

Published: 

21 Jun 2025 11:40 AM

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான (IND vs ENG 1st Test) ஹெடிங்லி டெஸ்டின் முதல் நாளில் இதுவரை இந்திய அணி 2 சதங்கள், ஒரு அரைசதத்துடன் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ள சுப்மன் கில் (Shubman Gill), தனது முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே சதம் அடித்து பல சாதனைகளை குவித்தார். ஒரு புறம் சுப்மன் கில் தனது சதத்திற்காக சமூக வலைதளங்களில் பிரபலமடைந்தாலும், மற்றொரு விஷயத்திற்காகவும் கில் பெயர் பேசுப்பொருளாகி வருகிறது. அதற்கு காரணம், அவர் அணிந்திருந்த கருப்பு சாக்ஸ்தான். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் முதல் நாளில் சுப்மன் கில் கருப்பு சாக்ஸ் அணிந்து களத்தில் பேட்டிங் செய்ய வந்தார். இது ஐசிசியின் ஆடை விதிகளுக்கு எதிரானது. இதனால், கில்லுக்கு தடையும் விதிக்கப்படலாம்.

ஐசிசி விதிகளை மீறினாரா கில்..?

டெஸ்ட் கிரிக்கெட்டில் உடை அணிவது குறித்து ஐசிசி கடுமையான விதிகள் மற்றும்  வழிகாட்டுதல்களை நிர்ணயித்துள்ளர். ஐசிசி விதிகளின்படி, போட்டியின் போது வீரர்கள் வெள்ளை, கிரீம் அல்லது வெளிர் சாம்பல் நிற சாக்ஸ் மட்டுமே அணிய வேண்டும். கிரிக்கெட்டுக்கான விதிகளை நிர்ணயிக்கும் எம்சிசி விதி 19.45 இன் கீழ், இந்த வண்ணங்களைத் தவிர, அடர் நிற சாக்ஸ் அணிய அனுமதி இல்லை என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த விதி 2023ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இதன் பின்னர் கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் இதைப் பின்பற்றி வருகின்றனர்.

இருப்பினும், ஹெடிங்லி டெஸ்டின் முதல் நாளில், சுப்மன் கில் கேமராவின் கண்களில் இருந்து தப்பவில்லை. கில் கருப்பு சாக்ஸ் அணிந்து பேட்டிங் செய்து வந்ததாக சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது விதி மீறலா என்ற கேள்விகள் எழுந்தன? இதற்காக கில்லுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது.

ஐசிசி தடை விதிக்குமா..?

சுப்மக் கிலுக்கு எதிராக என்ன முடிவு எடுக்கப்பட்டாலும், போட்டி அம்பயர் ரிச்சி ரிச்சர்ட்சன் தான் அதை எடுப்பார். ஐசிசி வழிகாட்டுதல்களின்படி, எந்தவொரு வீரரும் இதுபோன்ற உடைக் குறியீட்டை மீறினால் அது கிரேடு 1 குற்றமாகக் கருதப்படுகிறது. இதில், போட்டிக் கட்டணத்தில் 10% முதல் 50% வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும் வீரருக்கு தகுதி இழப்புப் புள்ளிகளும் வழங்கப்படலாம்.

இருப்பினும், கில் வேண்டுமென்றே இந்தத் தவறைச் செய்யவில்லை என்று போட்டி நடுவர் கருதினால், ஒரு எச்சரிக்கை மட்டும் கொடுத்து அவரை விடுவித்துவிடலாம். பொதுவாக, கிரிக்கெட்டில் உடை மீறல்களுக்கு கடுமையான தண்டனைகள் அரிதாகவே காணப்படுகின்றன, ஆனால் இந்த மீறலை டெஸ்ட் அணி கேப்டனே செய்துள்ளார் என்பதால், என்ன தண்டனை கொடுக்கப்படும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ஆனால் இப்போது அவரது உடை தொடர்பான இந்த சிறிய தவறு விவாதப் பொருளாக மாறியுள்ளது.