IPL 2026: பிளேஆஃப்க்கு எந்த 4 அணிகள் தகுதி பெறும்..? யார் யார் எவ்வளவு புள்ளிகள் பெற வேண்டும்?

IPL 2026 Playoffs: நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம், 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. பெங்களூரு 8 புள்ளிகளுடனும், +1.171 நிகர ரன் விகிதத்துடனும் 3வது இடத்தில் உள்ளனர்.

IPL 2026: பிளேஆஃப்க்கு எந்த 4 அணிகள் தகுதி பெறும்..? யார் யார் எவ்வளவு புள்ளிகள் பெற வேண்டும்?

ஐபிஎல் 2026

Published: 

23 Apr 2026 17:30 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) பங்கேற்கும் 10 அணிகளும் ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதன்படி, தற்போது பெரும்பாலான அணிகள் இப்போது ஏழு போட்டிகளில் விளையாடிவிட்டன. எனவே, பிளேஆஃப் சுற்றுகளைப் பொறுத்தவரை அடுத்த சில போட்டிகள் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும். பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது ஐபிஎல் தொடரில் சிறப்பான ஃபார்மில் உள்ளது . இந்தத் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. எனவே, பிளேஆஃப் சுற்றில் இடம்பிடிக்க அது ஒரு வலுவான போட்டியாளராக உள்ளது. ஒவ்வொரு அணியும் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பாண்ட்யா பிரதர்ஸ் இடையே சண்டையா..? எழுந்த கேள்வி.. க்ருணால் நச் பதில்!

ஐபிஎல் 2026 சீசனில் இதுவரை, பஞ்சாப் கிங்ஸ் 6 போட்டிகளில் விளையாடி, அவற்றில் 5-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. எனவே, பஞ்சாப் அணி 11 புள்ளிகளைப் பெற்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இன்னும் 8 போட்டிகள் மீதமுள்ளன. எனவே, அந்த 8 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால், பிளேஆஃப் சுற்றுக்கான கணக்கு முடிவாகிவிடும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று, 2-ல் தோல்வியடைந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் உள்ளது. இனி மீதமுள்ள 7 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்றால், பிளேஆஃப் சுற்றில் தங்களின் இடம் உறுதியாகிவிடும்.

நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம், 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. பெங்களூரு 8 புள்ளிகளுடனும், +1.171 நிகர ரன் விகிதத்துடனும் 3வது இடத்தில் உள்ளனர். இப்போது அவர்கள் மீதமுள்ள 8 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால், பிளேஆஃப் சுற்றில் பெங்களூரு இடம் உறுதியாகிவிடும்.

மீதமுள்ள அணிகள்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடிய 7 போட்டிகளில், 4 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இப்போது மீதமுள்ள 7 போட்டிகளில் 4 போட்டிகளில் ஹைதராபாத் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு நடந்தால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 16 புள்ளிகளுடன் பிளேஆஃப் சுற்றுக்கு நிச்சயம் தகுதி பெறும்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் 6 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. பிளேஆஃப்களில் ஒரு இடத்தைப் பிடிக்க டெல்லி இன்னும் 10 புள்ளிகளைப் பெற வேண்டும். மீதமுள்ள 8 போட்டிகளில் டெல்லி 5-ல் வெற்றி பெற வேண்டும்.

குஜராத் டைட்டன்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியைப் போன்றே ஒரு சூழ்நிலையில் உள்ளது. இரு அணிகளும் இதுவரை ஆடிய 6 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது ஆறு புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் மற்றும் டெல்லி மீதமுள்ள 8 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற வேண்டும். 16 புள்ளிகள் பெறும் அணிக்கு பிளேஆஃப் சுற்றில் இடம் உறுதியாகும்.

பிளேஆஃப் சுற்றில் இடம் பிடிக்க மும்பை இந்தியன்ஸ் அணி கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் வெற்றி பெற்று, 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. மும்பை அணி தனது கணக்கில் 4 புள்ளிகளைக் கொண்டுள்ளது. எனவே, மும்பை அணி மீதமுள்ள 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் 16 புள்ளிகளை பெற வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸின் நிலைமை மும்பையைப் போலவே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில், சென்னை 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இப்போது இன்னும் 8 போட்டிகள் மீதமுள்ளன. அதில், 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், சென்னைக்கு 12 புள்ளிகள் கிடைக்கும். புள்ளி அட்டவணையில் 16 புள்ளிகள் பெறும் அணி பிளேஆஃப் சுற்றில் இடம் பெறும்.

ALSO READ: வான்கடேவில் மும்பையும், சென்னையும் மோதல்.. பிட்ச் யாருக்கு சாதகம்..?

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இந்தத் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 5 போட்டிகளில் தோல்வியும் 2 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. எனவே, லக்னோ 4 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இனிவரும் 7 போட்டிகளிலும் இது வாழ்வா சாவா போராட்டமாக இருக்கும். ஏனெனில், 7 போட்டிகளில் 6-ல் வெற்றி பெறுவது கட்டாயம். அப்போதுதான் 16 புள்ளிகளை லக்னோ அணியால் பெற முடியும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. அவர்கள் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். ஒரு போட்டி மழையின் காரணமாகக் கைவிடப்பட்டது. தற்போது கொல்கத்தாவிடம் 3 புள்ளிகள் உள்ளன. எனவே, கொல்கத்தா 7 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். கொல்கத்தா ஒரு போட்டியில் தோற்றால்கூட, புள்ளிக் கணக்கு இன்னும் அதிகமாகிவிடும்.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..