AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Asia Cup Trophy Controversy: ஆசியக் கோப்பை விவகாரம்! பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்டாரா நக்வி? வெளியான தகவல்!

Asia Cup Trophy Mohsin Naqvi: சமீபத்திய கூட்டத்தில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ஏசிசி தலைவர் மொஹ்சின் நக்வியிடம் கடுமையான கேள்விகளை எழுப்பினார். அதைத் தொடர்ந்து, கூட்டத்தின் போது நக்வி மன்னிப்பு கேட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Asia Cup Trophy Controversy: ஆசியக் கோப்பை விவகாரம்! பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்டாரா நக்வி? வெளியான தகவல்!
மொஹ்சின் நக்வி Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Oct 2025 18:06 PM IST

கடந்த 2025 செப்டம்பர் 28ம் தேதி துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை (Asia Cup 2025) இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்பிறகு, சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி பாகிஸ்தான் அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற மறுத்தது. இதையடுத்து, மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi) ஆசியக் கோப்பையை தனது அலுவலகத்திற்கு எடுத்து சென்றார். அடுத்த கட்டமாக சமீபத்திய கூட்டத்தில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ஏசிசி தலைவர் மொஹ்சின் நக்வியிடம் கடுமையான கேள்விகளை எழுப்பினார். அதைத் தொடர்ந்து, கூட்டத்தின் போது நக்வி மன்னிப்பு கேட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. ஆசிய கோப்பை கோப்பை விரைவில் இந்தியாவுக்கு அனுப்பப்படும் அல்லது இந்தியாவில் இருந்து யாராவது அதைப் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டது. இருப்பினும், நக்வி சமீபத்திய ட்வீட்டில் இந்த வதந்திகள் அனைத்தையும் நிராகரித்தார்.

ALSO READ: வென்ற அணிக்கே ஆசியக் கோப்பை.. ஏசிசி கூட்டத்தில் பிசிசிஐ கடும் வாதம்..!

மொஹ்சின் நக்வி வெளியிட்ட அறிக்கை:


இது தொடர்பாக மொஹ்சின் நக்வி தனது சமீபத்திய சமூக ஊடகப் பதிவில், “இந்திய ஊடகங்கள் வெளியிடுவது உண்மைகள் அல்ல. பொய்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. நான் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை, பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்கவில்லை, ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். இந்தப் பொய்யான வதந்திகள் வெறும் பிரச்சாரம், இதன் நோக்கம் நமது சொந்த மக்களை தவறாக வழிநடத்துவது மட்டுமே” என்றார்.

மேலும், அந்த பதிவில், “துரதிர்ஷ்டவசமாக, இந்தியா கிரிக்கெட்டில் தொடர்ந்து அரசியலைக் கொண்டு வருகிறது. இது விளையாட்டின் உணர்வைப் புண்படுத்தியுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக, அன்று நான் கோப்பையை வழங்கத் தயாராக இருந்தேன். இப்போதும் அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன். அவர்கள் கோப்பையை வாங்க விரும்பினால், ACC அலுவலகத்திற்கு வந்து என்னிடமிருந்து அதைப் பெற அவர்கள் மிகவும் வரவேற்கப்படுகிறார்கள்” என்று எழுதினார்.

ALSO READ: இந்திய மண்ணில் நாளை முதல்.. வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட்! இந்திய பிளேயிங் லெவன் எப்படி?

முன்னதாக, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் கோப்பை விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள் தன்னை அவமதித்ததாக நக்வி குற்றம் சாட்டியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதி ராஜீவ் சுக்லா, ஆசிய கோப்பை கோப்பை ஏ.சி.சி.யின் சொத்து என்றும் அதில் யாருக்கும் தனிப்பட்ட உரிமை இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

Follow Us