AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகள் பிரிக்கப்படுவதும் ஏன்?

Separating Newlyweds in Aadi Month: ஆடி மாதம் என்பது அம்மன் வழிபாட்டிற்கும் மற்றும் 'ஆடிப் பட்டம் தேடி விதை' என்ற பழமொழிக்கு ஏற்ப உழவுத் தொழிலுக்கும் உரிய சிறப்பான காலமாகும். இக்காலத்தில் புதுமணத் தம்பதியர் கூடினால் அடுத்த பத்து மாதங்களில், அதாவது சித்திரை-வைகாசி மாத கடுமையான கோடைக் காலத்தில் குழந்தை பிறக்கும் என்பதால் தாயின் உடல்நலன் கருதியே தம்பதியர் பிரிக்கப்படுகின்றனர்.

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகள் பிரிக்கப்படுவதும் ஏன்?
தம்பதியர் பிரிவு
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 18 Jul 2026 12:41 PM IST

தமிழ் கலாச்சாரத்தில் ஆடி மாதம் என்பது மிகவும் தனித்துவமான மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலமாகக் கருதப்படுகிறது. குறிப்பாய் தமிழக கிராமப்புறங்களில் இம்மாதம் அம்மன் வழிபாட்டிற்குரிய உன்னதமான மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிப் பிறப்பு, ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், மற்றும் ஆடிப்பெருக்கு போன்ற பல்வேறு மங்களகரமான திருவிழாக்கள் இந்த மாதத்தில் பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்படுகின்றன. மாரியம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுதல், மஞ்சள் நீர் தெளித்து பூஜித்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் மூலம் மக்கள் தங்கள் நன்றியையும் பக்தியையும் அன்னைக்குச் செலுத்துகின்றனர்.

சுப நிகழ்ச்சிகள் மற்றும் திருமணங்கள் தள்ளி வைக்கப்படுவதன் பின்னணி

இத்தகைய ஆன்மீகச் சிறப்பு மிக்க மாதமாக இருந்தாலும், ஆடி மாதத்தில் திருமணம், காதுகுத்து, மற்றும் கிரகப்பிரவேசம் போன்ற தனிப்பட்ட குடும்ப சுப நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. இந்த காலகட்டத்தில் சுப காரியங்கள் முற்றிலும் தவிர்க்கப்படுவதுடன், புதிதாக திருமணமான தம்பதியரை பிரித்து வைக்கும் ஒரு சுவாரசியமான வழக்கமும் தமிழகத்தில் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. புதுமணப் பெண் தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்று இந்த மாதத்தைக் கழிப்பது ஒரு மரபாகவே மாறியுள்ளது. இதற்குப் பின்னால் ஆழமான காரணங்கள் உள்ளதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர்.

புதுமணத் தம்பதியரை பிரித்து வைப்பதன் பின்னணி

ஜூலை பாதியில் தொடங்கி ஆகஸ்ட் பாதி வரை நீடிக்கும் இந்த ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரைப் பிரித்து வைப்பதற்குப் பின்னால் ஒரு முக்கியமான மருத்துவ மற்றும் அறிவியல் காரணம் ஒளிந்துள்ளது. இந்த மாதத்தில் ஒரு பெண் கருத்தரித்தால், அதற்குப் பத்து மாதங்கள் கழித்து அதாவது ஏப்ரல் அல்லது மே மாதத்தில் குழந்தை பிறக்கும். இந்த சித்திரை மற்றும் வைகாசி மாதங்கள் தமிழ்நாட்டில் கத்திரி வெயில் எனப்படும் கடுமையான கோடைக்காலம் நிலவும் நேரமாகும். அக்காலத்தில் நிலவும் அதீத வெப்பம் பிரசவிக்கும் தாய்க்கும், பிறக்கும் குழந்தைக்கும் உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தான், அக்காலத்து முன்னோர்கள் திட்டமிட்டு தம்பதியரை பிரித்து வைத்தனர்.

விவசாயப் பணிகளும் குலதெய்வ வழிபாட்டு முக்கியத்துவமும்

ஆடி மாதம் என்பது “ஆடிப் பட்டம் தேடி விதை” என்ற பழமொழிக்கு ஏற்ப, விவசாயிகள் தங்களது முதன்மை வாழ்வாதாரமான விவசாயப் பணிகளைத் தொடங்கும் உன்னத காலமாகும். இக்காலத்தில் விதை விதைப்பது நல்ல பலனைத் தரும் என்பதால் விவசாயிகள் தங்களின் முழுக் கவனத்தையும் உழவுத் தொழிலில் செலுத்துவர். அதேபோல, விவசாயம் செழிக்கவும், குடும்பம் தழைக்கவும் மக்கள் தங்கள் குலதெய்வக் கோவில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வார்கள். இந்த முக்கிய பணிகளிலிருந்தும், குலதெய்வ வழிபாட்டிலிருந்தும் கவனம் சிதறாமல் இருக்கவே மற்ற குடும்ப விழாக்கள் தவிர்க்கப்படுகின்றன.

Also Read: ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்யலாமா? பாரம்பரிய நம்பிக்கைகளும் உண்மைகளும்!

இயற்கை மாற்றங்களும் கட்டுமானப் பணிகள் நிறுத்தமும்

ஆடி மாதத்தில் சுப காரியங்கள் தவிர்க்கப்படுவதற்குப் பின்னால் இயற்கை சூழல்களும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. பொதுவாக ஆடி மாதத்தில் “ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்” என்று கூறுமளவிற்கு அதிவேகமான காற்று வீசும். அத்துடன் எதிர்பாராத திடீர் மழையும் இக்காலத்தில் பெய்யக்கூடும். இதன் காரணமாகவே புதிய வீடு கட்டுவதற்கான பூமி பூஜை செய்தல், நிலம் வாங்குதல், மற்றும் புதுமனை புகு விழா (கிரகப்பிரவேசம்) போன்ற கட்டுமான மற்றும் மங்களகரமான காரியங்களைச் செய்யாமல் மக்கள் தள்ளி வைக்கின்றனர்.

Follow Us