AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2025ன் கடைசி மார்கழி பிரதோஷம்: இன்று தவறாமல் இதை செய்யவும்!

Margazhi Pradosham: இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு பிரதோஷ தினம் என்பது வெறும் வழிபாட்டு நாளல்ல; வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு புனித வாய்ப்பு. குறிப்பாக இந்த 2025ம் ஆண்டின் கடைசி பிரதோஷத்தை தவறவிடாமல், இந்த எளிய வழிபாடுகளை இன்றே மேற்கொண்டால், சிவபெருமானின் அருள் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படும் என்பதில் ஐயமில்லை.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 Dec 2025 15:19 PM IST
இன்றைய நாள் (டிசம்பர் 17) சாதாரணமான நாள் அல்ல, 2025-ஆம் ஆண்டின் கடைசி பிரதோஷ தினம் ஆகும். இந்த பிரதோஷம் கடந்த காலத்தின் தடைகளை விலக்கி, வரவிருக்கும் ஆண்டிற்கு நன்மையான தொடக்கத்தை அளிக்கும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது. வரவுள்ள 2026-ஆம் ஆண்டு நமக்கு நன்மை நிறைந்த, பொன்னான ஆண்டாக அமைய வேண்டுமென்றால், இன்றைய பிரதோஷ வேளையில் சிவபெருமானிடம் சில முக்கிய வேண்டுதல்களை மனமார கேட்பது மிக விசேஷமாக கருதப்படுகிறது.

இன்றைய நாள் (டிசம்பர் 17) சாதாரணமான நாள் அல்ல, 2025-ஆம் ஆண்டின் கடைசி பிரதோஷ தினம் ஆகும். இந்த பிரதோஷம் கடந்த காலத்தின் தடைகளை விலக்கி, வரவிருக்கும் ஆண்டிற்கு நன்மையான தொடக்கத்தை அளிக்கும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது. வரவுள்ள 2026-ஆம் ஆண்டு நமக்கு நன்மை நிறைந்த, பொன்னான ஆண்டாக அமைய வேண்டுமென்றால், இன்றைய பிரதோஷ வேளையில் சிவபெருமானிடம் சில முக்கிய வேண்டுதல்களை மனமார கேட்பது மிக விசேஷமாக கருதப்படுகிறது.

1 / 5
மாதந்தோறும் பிரதோஷம் வந்தாலும், மார்கழி மாதத்தில் வரும் கடைசி பிரதோஷம் மிகவும் புனிதமானதாக சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில்தான் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு நடுவே சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடி தேவர்களுக்கு அருள்பாலித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அதேபோல், பக்தர்களுக்கும் அவர் அருளை வாரி வழங்கத் தயாராக இருப்பார்.இந்த பிரதோஷ நாளில் செய்ய வேண்டிய மூன்று எளிய ஆனால் சக்திவாய்ந்த வழிபாடுகள் இவை:

மாதந்தோறும் பிரதோஷம் வந்தாலும், மார்கழி மாதத்தில் வரும் கடைசி பிரதோஷம் மிகவும் புனிதமானதாக சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில்தான் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு நடுவே சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடி தேவர்களுக்கு அருள்பாலித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அதேபோல், பக்தர்களுக்கும் அவர் அருளை வாரி வழங்கத் தயாராக இருப்பார்.இந்த பிரதோஷ நாளில் செய்ய வேண்டிய மூன்று எளிய ஆனால் சக்திவாய்ந்த வழிபாடுகள் இவை:

2 / 5
முதல் வழிபாடு: சாயங்கால பிரதோஷ நேரத்தில், வீட்டில் சிவலிங்கம் இருந்தால், ஒரு செம்புப் பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் சிறிது கருப்பு எள் கலந்து அபிஷேகம் செய்யலாம். வீட்டில் சிவலிங்கம் இல்லையெனில், அருகிலுள்ள சிவாலயத்தில் அபிஷேகத்திற்கான பொருட்களை வழங்கலாம். எள் கலந்த நீரால் செய்யப்படும் அபிஷேகம் கர்ம வினைகளை நீக்கி சிவனின் அருளை விரைவாக பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது.

முதல் வழிபாடு: சாயங்கால பிரதோஷ நேரத்தில், வீட்டில் சிவலிங்கம் இருந்தால், ஒரு செம்புப் பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் சிறிது கருப்பு எள் கலந்து அபிஷேகம் செய்யலாம். வீட்டில் சிவலிங்கம் இல்லையெனில், அருகிலுள்ள சிவாலயத்தில் அபிஷேகத்திற்கான பொருட்களை வழங்கலாம். எள் கலந்த நீரால் செய்யப்படும் அபிஷேகம் கர்ம வினைகளை நீக்கி சிவனின் அருளை விரைவாக பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது.

3 / 5
இரண்டாவது வழிபாடு:சிவபெருமானுக்கு மிகவும் பிரியமானது வில்வ இலை. அந்த வில்வ இலையில் சந்தனத்தால் “ஸ்ரீராம ஜெயம்” என்று எழுதி சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்யுங்கள். இதனுடன் சந்தனம், பூ, தூபம், தீபம், நைவேத்தியம் என ஐந்து உபசாரங்களையும் பக்தியுடன் செய்யலாம். இது பஞ்சபூதங்களையே இறைவனுக்கு அர்ப்பணிப்பதற்கு ஒப்பானதாக கருதப்படுகிறது.

இரண்டாவது வழிபாடு:சிவபெருமானுக்கு மிகவும் பிரியமானது வில்வ இலை. அந்த வில்வ இலையில் சந்தனத்தால் “ஸ்ரீராம ஜெயம்” என்று எழுதி சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்யுங்கள். இதனுடன் சந்தனம், பூ, தூபம், தீபம், நைவேத்தியம் என ஐந்து உபசாரங்களையும் பக்தியுடன் செய்யலாம். இது பஞ்சபூதங்களையே இறைவனுக்கு அர்ப்பணிப்பதற்கு ஒப்பானதாக கருதப்படுகிறது.

4 / 5
மூன்றாவது மற்றும் மிக முக்கியமான வழிபாடு:பிரதோஷ நேரத்தில் கோயிலில் அல்லது வீட்டில் அமைதியாக அமர்ந்து “ஓம் நமச்சிவாய” மந்திரத்தை அல்லது உங்களுக்கு தெரிந்த சிவ மந்திரங்களை மனதிற்குள் ஜபிக்கவும். அதன் பின், உங்கள் கவலைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் சிவபெருமானிடம் சமர்ப்பித்து, வரவுள்ள 2026-ஆம் ஆண்டு நல்ல முறையில் அமைய வேண்டும் என்று மனமுருக வேண்டுங்கள்.

மூன்றாவது மற்றும் மிக முக்கியமான வழிபாடு:பிரதோஷ நேரத்தில் கோயிலில் அல்லது வீட்டில் அமைதியாக அமர்ந்து “ஓம் நமச்சிவாய” மந்திரத்தை அல்லது உங்களுக்கு தெரிந்த சிவ மந்திரங்களை மனதிற்குள் ஜபிக்கவும். அதன் பின், உங்கள் கவலைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் சிவபெருமானிடம் சமர்ப்பித்து, வரவுள்ள 2026-ஆம் ஆண்டு நல்ல முறையில் அமைய வேண்டும் என்று மனமுருக வேண்டுங்கள்.

5 / 5
Follow Us