AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வீட்டில் ஏற்றும் விளக்கு அணைக்கும் போது இந்த தவறை செய்யாதீங்க…

Vilakku Cooling Rules: தீபத்தின் சுடரில் முப்பெரும் தேவியரும் வாசம் செய்வதால், விளக்கை அணைக்கும்போது வாயால் ஊதியோ அல்லது பூக்களைக் கொண்டு அழுத்தியோ ஒருபோதும் அணைக்கக் கூடாது. விளக்கில் உள்ள எண்ணெய் தீர்ந்து திரி தானாகக் கருகி அணைவது குடும்பத்திற்குப் பெரும் சாபத்தையும் நிதி இழப்பையும் ஏற்படுத்தும் என்பதால், தீபத்தை எப்போதும் சுயமாய் அணைய விடக்கூடாது.

வீட்டில் ஏற்றும் விளக்கு அணைக்கும் போது இந்த தவறை செய்யாதீங்க…
காமாட்சி விளக்கு Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 23 Jun 2026 15:45 PM IST

இந்து சாஸ்திரங்களின்படி, இல்லங்களிலும் ஆலயங்களிலும் ஏற்றப்படும் தீப வழிபாடானது சுற்றுப்புறத்தில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதுடன், மனித மனதின் அறியாமை என்ற இருளையும் அகற்றும் ஆற்றல் கொண்டது. தீபத்தின் சுடரில் அலைமகளான மகாலட்சுமியும், அதன் பிரகாசமான ஒளியில் கலைமகளான சரஸ்வதியும், அதிலிருந்து வெளிப்படும் வெப்பத்தில் மலைமகளான பார்வதி தேவியும் வாசம் செய்வதாக ஐதீகம் நிலவுகிறது. இதனால், முறைப்படி விளக்கேற்றி வழிபடுபவர்களுக்கு இந்த முப்பெரும் தேவியரின் ஆசியும், தெய்வீக தூய்மையும் ஒருசேரக் கிடைக்கும். மேலும், தினசரி வழிபாட்டின் மூலம் தீய சக்திகள் மற்றும் திருஷ்டிகளின் பாதிப்பிலிருந்து வீட்டைப் பாதுகாக்க முடியும்.

வழிபாட்டிற்கு உகந்த விளக்குகள் மற்றும் தூய்மையின் அவசியம்

பூஜைக்குப் பயன்படுத்தும் விளக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் பராமரிப்பதிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. ஆன்மீக ரீதியாக மண் விளக்குகளைப் பயன்படுத்தி தீபமேற்றும்போது, ஒருமுறை பயன்படுத்திய விளக்கை மீண்டும் உபயோகிக்கக் கூடாது என்ற விதி உள்ளது. அதே வேளையில், பித்தளை அல்லது வெள்ளி போன்ற உலோக விளக்குகளைப் பயன்படுத்துபவர்கள், ஒவ்வொரு முறை வழிபாட்டைத் தொடங்குவதற்கு முன்பும் அவற்றை நல்ல முறையில் துலக்கி, தூய்மைப்படுத்துவது கட்டாயமாகும். அசுத்தமான அல்லது எண்ணெய் கறை படிந்த விளக்குகளைப் பயன்படுத்துவது எதிர்மறையான பலன்களைத் தரும் என்பதுடன், குடும்பத்தின் மகிழ்ச்சியைக் குலைத்து, தேவையற்ற நிதி இழப்புகளையும் ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது.

விளக்கை அணைக்கும்போது தவிர்க்க வேண்டிய கடுமையான தவறுகள்

தீபத்தைக் குளிர்விக்கும் போது செய்யக்கூடாத பல ஆன்மீகக் கட்டுப்பாடுகள் உள்ளன. குறிப்பாக, எரியும் விளக்கை வாயால் ஊதியோ அல்லது கைகளால் வீசியோ ஒருபோதும் அணைக்கக் கூடாது. பஞ்சபூதங்களில் ஒன்றான காற்றைக் கொண்டு, மற்றொரு பூதமான நெருப்பை அணைப்பது சாஸ்திர விரோதமாகக் கருதப்படுகிறது. மேலும், விளக்கில் உள்ள எண்ணெய் முழுமையாகத் தீர்ந்து, திரி கருகித் தானாக அணையும் நிலை ஏற்படுவது இல்லத்திற்குப் பெருங்கேட்டை விளைவிக்கும். அதேபோல், மங்களப் பொருளான பூக்களைக் கொண்டு சுடரை நேரடியாக அழுத்தி அணைப்பதும் தவறான செயலாகும். விளக்கின் சுடர் அணைந்த பிறகும், அதன் வெப்பம் முழுமையாகத் தணியும் வரை அந்த இடத்தை சுத்தம் செய்யவோ அல்லது விளக்கை நகர்த்தவோ கூடாது.

சாஸ்திரப்படி விளக்கை குளிர்விக்கும் சரியான முறைகள்

தீபத்தை மங்களகரமான முறையில் மலையேற்ற சில எளிய வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. வெள்ளி குச்சிகள் அல்லது ஆன்மீக ரீதியாகப் புனிதமாகக் கருதப்படும் மாதுளை, நெல்லி, மற்றும் மருதாணி போன்ற மரங்களின் சிறிய குச்சிகளைப் பயன்படுத்தி திரியைப் பின்பக்கமாக (உள்நோக்கி) இழுத்து சுடரைக் குளிர்விப்பதே மிகச் சிறந்த முறையாகும். இதுதவிர, சிறிய வாழைத்தண்டு துண்டைக் கொண்டு திரியின் நுனியை லேசாகத் தொட்டும் அணைக்கலாம். இந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருப்பதுடன், தேவையின்றி விளக்கை நாள் முழுவதும் எரியவிடுவதையும் தவிர்க்க முடியும்.

Follow Us