யோகா தினம்: கிரிவலப் பாதையில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட வெளிநாட்டு பக்தர்கள்!!
யோகா தினமான இன்று கிரிவலப் பாதை நிருதி லிங்கம் அருகே வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் வெளி மாநில பக்தர்கள் அனைவரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு பல்வேறு ஆசனங்கள் செய்து அசத்தினர். இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டு பக்தர்கள் கிட்டார் மற்றும் வயலின் சிவபெருமானின் பாடல் பாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாடு முழுவதும் இன்று யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பாரத பிரதமர் முதல் அனைவரும் யோகா பயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நிருதி லிங்கம் அருகே வெளிநாட்டு பக்தர்கள் ஒன்று கூடி யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். குறிப்பாக நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டைச் சேர்ந்த நபர்கள் திருவண்ணாமலையில் தங்கி அண்ணாமலையாரை வணங்கி வாழ்ந்து வருகின்றனர்.
யோகா தினமான இன்று கிரிவலப் பாதை நிருதி லிங்கம் அருகே வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் வெளி மாநில பக்தர்கள் அனைவரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு பல்வேறு ஆசனங்கள் செய்து அசத்தினர். இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டு பக்தர்கள் கிட்டார் மற்றும் வயலின் சிவபெருமானின் பாடல் பாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
