Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்று தை கடைசி வெள்ளி, சுக்ரவார பஞ்சமி.. பணவரவு பெருக இதை செய்யலாம்..

தை கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் தேய்பிறை பஞ்சமி திதி இணைந்த நாளில் செய்ய வேண்டிய ஒரு விசேஷ வழிபாடு குறித்து தெரிந்துக்கொள்ளவும். இன்றைய தினம் அசைவம் சாப்பிட்டிருந்தால் இந்த பூஜையைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கையில் ஏற்படும் கடன் பிரச்சினைகள் நீங்கவும், பணவரவு அதிகரிக்கவும், வீட்டில் எப்போதும் மகாலட்சுமியின் கடாட்சம் நிலைத்திருக்கவும் உதவும் ஒரு எளிய வழிபாட்டு முறையாகும்.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 Feb 2026 14:49 PM IST
இன்று பிப்ரவரி 6 – தை மாதம் 23, மேலும் இது தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாருக்கும், செல்வத்தை வழங்கும் சுக்கிர பகவானுக்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது. அதோடு இன்று தேய்பெரி பஞ்சமி திதி என்பதால், இந்த நாளில் செய்யப்படும் பரிகாரங்கள் கூடுதல் சக்தி பெறுகின்றன. கடன், நோய், மனக்கவலை, பணக்குறைவு போன்றவை நீங்க இந்த பரிகாரத்தை தாராளமாக செய்யலாம்.

இன்று பிப்ரவரி 6 – தை மாதம் 23, மேலும் இது தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாருக்கும், செல்வத்தை வழங்கும் சுக்கிர பகவானுக்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது. அதோடு இன்று தேய்பெரி பஞ்சமி திதி என்பதால், இந்த நாளில் செய்யப்படும் பரிகாரங்கள் கூடுதல் சக்தி பெறுகின்றன. கடன், நோய், மனக்கவலை, பணக்குறைவு போன்றவை நீங்க இந்த பரிகாரத்தை தாராளமாக செய்யலாம்.

1 / 5
வழிபாடு செய்ய ஏற்ற நேரம்: இந்த நாள் முழுவதும் பஞ்சமி திதி இருந்தாலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை செய்யப்படும் வழிபாடு சிறப்பான பலனை தரும். மாலை 6 மணிக்குப் பிறகு இலைகளை பறிக்கக் கூடாது என்பதால், அவற்றை முன்பே தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வழிபாடு செய்ய ஏற்ற நேரம்: இந்த நாள் முழுவதும் பஞ்சமி திதி இருந்தாலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை செய்யப்படும் வழிபாடு சிறப்பான பலனை தரும். மாலை 6 மணிக்குப் பிறகு இலைகளை பறிக்கக் கூடாது என்பதால், அவற்றை முன்பே தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

2 / 5
தேவையான பொருட்கள்: மருதாணி இலை, துளசி இலை, மாதுளை இலை (இவை இல்லையெனில் செம்பருத்தி இலை), இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், சிறிய துண்டு பச்சை கற்பூரம், ஆறு ஒரு ரூபாய் நாணயங்கள், மஞ்சள், குங்குமம், ஒரு மண் அகல், நெய் மற்றும் ஐந்து திரிகள்.

தேவையான பொருட்கள்: மருதாணி இலை, துளசி இலை, மாதுளை இலை (இவை இல்லையெனில் செம்பருத்தி இலை), இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், சிறிய துண்டு பச்சை கற்பூரம், ஆறு ஒரு ரூபாய் நாணயங்கள், மஞ்சள், குங்குமம், ஒரு மண் அகல், நெய் மற்றும் ஐந்து திரிகள்.

3 / 5
வழிபாட்டு முறை:இலைகளை சுத்தமாக கழுவி உலர்த்தி, ஒரு சுத்தமான தட்டில் வைக்கவும். மஞ்சள், குங்குமம் இட்டு, அதன் மேல் இலைகள், கிராம்பு, ஏலக்காய், பச்சை கற்பூரம் வைத்து, ஆறு ஒரு ரூபாய் நாணயங்களை வட்ட வடிவில் அடுக்கவும். நடுவில் மண் அகலில் நெய் ஊற்றி ஐந்து திரிகள் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். தீபம் வடக்கு திசை நோக்கி எரியுமாறு வைக்க வேண்டும். தீபத்தை பார்த்தபடியே “ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமக” என்ற மகாலட்சுமி மந்திரத்தை 27 முறை அல்லது 108 முறை ஜபித்து, வீட்டில் பணவரவு பெருக வேண்டும், செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்று மனதார பிரார்த்திக்கவும்.

வழிபாட்டு முறை:இலைகளை சுத்தமாக கழுவி உலர்த்தி, ஒரு சுத்தமான தட்டில் வைக்கவும். மஞ்சள், குங்குமம் இட்டு, அதன் மேல் இலைகள், கிராம்பு, ஏலக்காய், பச்சை கற்பூரம் வைத்து, ஆறு ஒரு ரூபாய் நாணயங்களை வட்ட வடிவில் அடுக்கவும். நடுவில் மண் அகலில் நெய் ஊற்றி ஐந்து திரிகள் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். தீபம் வடக்கு திசை நோக்கி எரியுமாறு வைக்க வேண்டும். தீபத்தை பார்த்தபடியே “ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமக” என்ற மகாலட்சுமி மந்திரத்தை 27 முறை அல்லது 108 முறை ஜபித்து, வீட்டில் பணவரவு பெருக வேண்டும், செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்று மனதார பிரார்த்திக்கவும்.

4 / 5
வழிபாட்டுக்குப் பிந்தைய நடைமுறை: அடுத்த நாள் (சனிக்கிழமை) குளித்து முடித்தபின், மஞ்சள் அல்லது வெள்ளை துணியில் இலைகள், நாணயங்கள், கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை வைத்து சிறிய மூட்டையாக கட்டி, பீரோ அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மாதம் கழித்து, இலைகளை பொடியாக்கி சாம்பிராணியுடன் சேர்த்து வெள்ளிக்கிழமை வீட்டில் தூபம் காட்டலாம். நாணயங்களை கோவில் உண்டியலில் போடலாம் அல்லது பூஜை பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம்.இந்த பரிகாரத்தை முறையாக செய்தால், ஒரு மாதத்திற்குள் பணக்கட்டுப்பாடு நீங்கி, பணவரவு பலமடங்கு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

வழிபாட்டுக்குப் பிந்தைய நடைமுறை: அடுத்த நாள் (சனிக்கிழமை) குளித்து முடித்தபின், மஞ்சள் அல்லது வெள்ளை துணியில் இலைகள், நாணயங்கள், கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை வைத்து சிறிய மூட்டையாக கட்டி, பீரோ அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மாதம் கழித்து, இலைகளை பொடியாக்கி சாம்பிராணியுடன் சேர்த்து வெள்ளிக்கிழமை வீட்டில் தூபம் காட்டலாம். நாணயங்களை கோவில் உண்டியலில் போடலாம் அல்லது பூஜை பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம்.இந்த பரிகாரத்தை முறையாக செய்தால், ஒரு மாதத்திற்குள் பணக்கட்டுப்பாடு நீங்கி, பணவரவு பலமடங்கு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

5 / 5