AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Skin Care Tips: குளிக்கும் போது உப்பு – பால் மந்திரம்.. சருமத்தின் அழகை மீட்டெடுக்கும்!

Bath Tips For Skin: முகம் மட்டுமல்ல, உங்கள் கழுத்து, தொண்டை, கைகள் மற்றும் கால்கள் பல்வேறு இடங்களில் பழுப்பு நிறமாக இருப்பதைக் காணும்போது, ​​அந்த நேரத்தில், ஆண்கள் சாட்ஸ் அணியவும், பெண்கள் ஸ்லீவ்லெஸ் போன்ற ஆடைகளை அணியவும் தர்ம சங்டங்கள் கொள்கிறார்கள். அந்த நேரத்தில், உப்பு மற்றும் பால் கொண்டு தேய்ப்பது உங்களுக்கு பிரகாசமான சருமத்தைத் தரும்.

Skin Care Tips: குளிக்கும் போது உப்பு – பால் மந்திரம்.. சருமத்தின் அழகை மீட்டெடுக்கும்!
சரும பளபளப்புImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Sep 2025 21:29 PM IST

சிலர் நாள் முழுவதும் பல்வேறு பணிகளுக்காக வெயிலில் செல்ல வேண்டியிருக்கிறது. வேலைகள் முடிந்து வீடு திரும்பும்போது, ​​அவர்கள் சோர்வாக உணர்கிறார்கள். தொடர்ந்து, கண்ணாடி முன் நின்றால், அவர்களின் முகம் கருமையாகிவிட்டதாக உணர்வார்கள். சில நேரங்களில், முகத்தில் (Face) முகப்பரு மற்றும் பிற கரும்புள்ளிகளும் காணப்படுகின்றன. இதனுடன், சுருக்கங்கள் தோன்றத் தொடங்கும். பலர் நிறைய பணம் செலவழித்து, இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் போக்கவும், பலரும் தங்களை அழகாக வெளிக்காட்டிக்கொள்ள ஆன்லைன், கடைகள் என அழகு சாதன பொருட்களை (Beauty products) வாங்கி குவிக்கிறார்கள். இது பெரியளவில் பலனை தராது. சிலர் பார்லருக்குச் சென்று டான் நீக்கம் மற்றும் முகத்தை வெண்மையாக்கும் முக சிகிச்சைகளை செய்கிறார்கள். சிலர் தங்கள் சருமத்தை சுத்தம் செய்ய சோப்பை பயன்படுத்துகிறார்கள். இதற்கு மாற்றாக வீட்டில் எளிதாக கிடைக்கும் உப்பு மற்றும் பால் ஆகிய இரண்டு பொருட்களையும் சரியாகப் பயன்படுத்தி, சருமத்தின் அழகை பெறலாம். அந்தவகையில், இவற்றை எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

உப்பு கலவை:

முகம் மட்டுமல்ல, உங்கள் கழுத்து, தொண்டை, கைகள் மற்றும் கால்கள் பல்வேறு இடங்களில் பழுப்பு நிறமாக இருப்பதைக் காணும்போது, ​​அந்த நேரத்தில், ஆண்கள் சாட்ஸ் அணியவும், பெண்கள் ஸ்லீவ்லெஸ் போன்ற ஆடைகளை அணியவும் தர்ம சங்டங்கள் கொள்கிறார்கள். அந்த நேரத்தில், உப்பு மற்றும் பால் கொண்டு தேய்ப்பது உங்களுக்கு பிரகாசமான சருமத்தைத் தரும். முகத்தின் பளபளப்பை அதிகரிக்க பலர் பால் தடவுகிறார்கள். இருப்பினும், பாலில் மட்டும் குளிக்க முடியாது. குளியல் நீரில் இன்னும் சில பொருட்களை கலக்க வேண்டும். சோப்புக்கு பதிலாக, ஓட்ஸ் மற்றும் உப்பு போன்ற கலவையை சேர்த்து, குளிக்கும்போது அதை உங்கள் உடலில் தேய்க்க வேண்டும். இதைச் செய்வது சருமத்தில் உள்ள அனைத்து அழுக்குகளையும் நீக்கும்.

ALSO READ: அதிக மன அழுத்தம் முடி உதிர்வை ஏற்படுத்துமா..? சரிசெய்வது எப்படி..?

இதை செய்வது எப்படி..?

வீட்டில் தயாரிக்கப்பட்ட உடல் ஸ்க்ரப் உங்கள் சருமத்தை மாயாஜாலமாக மாற்றும். அதன்படி, இதை தயாரிக்க ஒரு கிண்ணத்தில் இமயமலை இளஞ்சிவப்பு உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 20-25 சொட்டு லாவெண்டர் எண்ணெயைச் சேர்க்கலாம். கலவையை ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். உப்பு அனைத்து எண்ணெயையும் உறிஞ்சியதும், பால், ஓட்ஸ், தேன் மற்றும் ரோஜா இதழ்களைச் சேர்க்கவும். இந்தக் கலவையை ஒரு கண்ணாடி ஜாடியில் சேமித்து வைக்கலாம்.

ALSO READ: கழுத்தில் உள்ள கருமையான வடுவால் கவலையா..? இவை உங்கள் பிரச்சனையை சரிசெய்யும்!

குளிக்கும்போது, ​​இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட கலவையை உங்கள் கையில் எடுத்து லேசாக தேய்க்கவும். இதை உங்கள் சருமத்தில் தடவி 10 நிமிடங்கள் விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். மேலும் இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட பாடி ஸ்க்ரப்பைப் பயன்படுத்தும் நாளில், அக்காரணத்தையும் கொண்டும் சோப்பைப் பயன்படுத்த வேண்டாம்.

Follow Us