Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இன்ஸ்டாகிராமில் 2 Followers குறைந்ததால் ஆத்திரம்.. கணவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த மனைவி!

UP Woman Files Police Complaint on her Husband | பொதுமக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், சிலர் தங்களது உறவுகளை விடவும் சமூக ஊடகங்களை மேலாக நினைக்கின்றனர். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் குறைந்ததால் பெண் ஒருவர் தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 2 Followers குறைந்ததால் ஆத்திரம்.. கணவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த மனைவி!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 14 Jun 2025 08:56 AM

உத்தர பிரதேசம், ஜூன் 14 : உத்தர பிரதேசத்தில் (UP – Uttar Pradesh) இன்ஸ்டாகிராமில் (Instagram) இரண்டு ஃபாலோவர்ஸ் குறைந்ததால் ஆத்திரமடைந்த மனைவி, அதற்கு தனது கணவன் தாக் காரணம் என கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவன் தன்னை அதிக நேரம் வீட்டு வேலைகளை செய்ய கூறுவதாகவும், இதனால் இன்ஸ்டாகிராமில் கவனம் செலுத்த முடியாமல் போனதால் இரண்டு ஃபாலோவர்ஸ் குறைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், உபியில் நடைபெற்ற இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமூக ஊடகங்களுக்கு அடிமையாகும் பொதுமக்கள்

பொதுமக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பொது மக்கள், தங்களது நாள் முழுவதையும் சமூக ஊடகங்களில் செலவழிக்கின்றனர். பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி, சிலர் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். சமூக ஊடகங்களில் மிகப்பெரிய பிரபலமாக வரவேண்டும் என்பதற்காக பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்கள் குறைந்ததால் கணவனை விட்டு பிரியும் அளவிற்கு ஒரு பெண் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 ஃபாலோவர்ஸ் குறைந்ததால் ஆத்திரம் – கணவனை மீது புகார்

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின் படி, உத்தர பிரதேச மாநிலம் ஹப்பூர் பகுதியை சேர்ந்த நிஷா என்ற பெண் ஒருவர் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவன் மீது புகார் அளித்துள்ளார். நிஷா தனது கணவருடன் வசித்து வரும் நிலையில், அவர் தன்னை எப்போது வீட்டு வேலைகளை செய்ய கூறுவதாகவும், சமூக ஊடகங்களை பயன்படுத்த கூடாது என்று கூறுவதாக கூறியுள்ளார். இவ்வாறு நாள் முழுவதும் வீட்டு வேலைகளை செய்ததன் காரணமாக தனக்கு இன்ஸ்டாகிராமில் இரண்டு ஃபாலோவர்ஸ் குறைந்திவிட்டதாகவும், அதற்கு காரணம் தனது கணவர் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இரண்டு ஃபாலோவர்ஸ் குறைந்ததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தது மட்டுமன்றி, இதன் காரணமாக நிஷா தனது கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசிக்கும் அளவுக்கு சென்றுள்ளது. இதேபோல நிஷாவின் கணவரும் தனது மனைவி அதிகமாக சமூக இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதாக புகார் அளித்துள்ளார். பல மணி நேரமாக கணவன் மற்றும் மனைவியின் புகாரை மாறி மாறி கேட்ட காவல்துறை அதிகாரிகள் அவர்களுக்கு குடும்ப வாழ்க்கை மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவுரை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!...
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!...
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!...
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!...
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!...
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி..
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி.....
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்...
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!...
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே..
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே.....
எனது அடுத்த படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் பிரேம் குமார்
எனது அடுத்த படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் பிரேம் குமார்...
”மதம் மக்களுக்கானது, அரசியலுக்கானது இல்லை” - திருமாவளவன்..
”மதம் மக்களுக்கானது, அரசியலுக்கானது இல்லை” - திருமாவளவன்.....