AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Droupadi Murmu: ரஃபேல் விமானத்தில் பறக்கப்போகும் குடியரசு தலைவர் முர்மு.. நாளை புதிய வரலாறு..!

Droupadi Murmu will fly a Rafale Jet: ரஃபேல் என்பது பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த நவீன 4.5 தலைமுறை பல்நோக்கு போர் விமானமாகும். கடந்த 2016ம் ஆண்டு இந்தியா சுமார் ரூ. 59,000 கோடி செலவில் ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்கியது. இந்த ஜெட் விமானங்கள் வான்வழிப்போர், தரைவழித் தாக்குதல் மற்றும் கடல்சார் ரோந்துக்கு பயன்படுத்தப்படுகின்றன.

Droupadi Murmu: ரஃபேல் விமானத்தில் பறக்கப்போகும் குடியரசு தலைவர் முர்மு.. நாளை புதிய வரலாறு..!
குடியரசு தலைவர் திரௌபதி முர்முImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Oct 2025 20:42 PM IST

2025 அக்டோபர் 29ம் தேதியான நாளை ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை நிலையத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் நிகழ இருக்கிறது. இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு (Droupadi Murmu) ரஃபேல் போர் விமானத்தில் பறக்க இருக்கிறது. இது அவரது குடியரசு தலைவர் பதவியில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமையும். இந்தப் போர் விமானம் இந்திய விமானப்படையின் (Indian Air Force) வலிமையையும் இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களையும் வெளிப்படுத்தும். இந்திய குடியரசு தலைவர் முர்மு இந்திய ஆயுத படைகளின் உச்ச தளபதி ஆவார். அதன்படி, இந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடிப் பெண்மணி மற்றும் இரண்டாவது பெண்மணி ஆவார்.

2023ல் SU-30 MKIல் பறந்த குடியரசு தலைவர்:


முன்னதாக, கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அசாமில் உள்ள தேஸ்பூர் விமானப்படை நிலையத்தில் சுகோய் – 30 எம்கேஐ போர் விமானத்தை இயக்கினார். இந்திய குடியரசு தலைவர் ஒருவர் போர் விமானத்தை ஓட்டுவது இது மூன்றாவது முறையாகும். திரௌபதி முர்மு பயணித்த போர் விமானம் வேகம் மணிக்கு 2,000 கிலோமீட்டரை 30 நிமிடஙக்ளில் கடந்தது. இதுகுறித்து பேசிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, “ இந்த அனுபவம் அற்புதமானது. இந்திய விமானப்படையின் வலிமையை கண்டு பெருமைப்படுகிறேன். இந்த விமானம் வரலாற்று சிறப்புமிக்கது மட்டுமல்லாமல் பெண்கள் இராணுவத்தில் சேர ஊக்குவிக்கும்” என்றார்.

ALSO READ: எந்தெந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி..? எப்போது தொடக்கம்..? முழு விவரம் இதோ!

ரஃபேல் ஜெட் விமானம் பற்றிய விவரம்:

ரஃபேல் என்பது பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த நவீன 4.5 தலைமுறை பல்நோக்கு போர் விமானமாகும். கடந்த 2016ம் ஆண்டு இந்தியா சுமார் ரூ. 59,000 கோடி செலவில் ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்கியது. இந்த ஜெட் விமானங்கள் வான்வழிப்போர், தரைவழித் தாக்குதல் மற்றும் கடல்சார் ரோந்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஜெட் விமானம் மணிக்கு 1,900 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 3,700 கிலோமீட்டர் வரை பறக்க முடியும்.

ALSO READ: டெல்லி விமான நிலையத்தில் தீ பிடித்து எரிந்த பேருந்து.. கிளம்பிய கரும்புகை! போராடி தீயை அணைந்த ஊழியர்கள்..!

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை போல ஒரு பெண் போர் விமானத்தை ஓட்டுவது, இராணுவம் மற்றும் அறிவியல் துறையில் உள்ள பெண்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். இது இந்தியாவின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் தன்னம்பிக்கையை நிரூப்பிக்கிறது.

 

Follow Us