உச்சக்கட்ட கோபத்தில் சூரியன்…இந்தியாவின் செயற்கைகோள்-சிக்னல்கள் பாதிக்க வாய்ப்பு…இஸ்ரோ எச்சரிக்கை!
Solar Flare Disrupt: சூரிய கோளில் ஏற்பட்ட வெடிப்பால் இந்தியாவின் செயற்கைகோள், தொலைக்காட்சி சிக்னல்கள், ரேடார் அமைப்புகள் உள்ளிட்டவை பெரும் பாதிப்பை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், செயற்கைகோள்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

சூரிய வெடிப்பால் இந்திய செயற்கைகோளுக்கு ஆபத்து
சூரிய கோளில் கடந்த சில நாட்களாக சூரிய புள்ளி கூட்டத்தில் அடுத்தடுத்து வெடிப்பு ஏற்பட்டதால் பல தீவிர சூரிய துகள்கள் உருவாகியுள்ளன. இதனால், உலகில் உள்ள விண்வெளி நிறுவனங்கள் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளன. அதில், இந்தியாவில் தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள், வரி செலுத்துதல் அமைப்புகள், தொலைக்காட்சி ஒளிபரப்புகள் மற்றும் ரேடார் செயல்பாடுகளை சேதப்படுத்து என்றும், வானொலி மின்தடை ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. அதிகரித்த சூரிய செயல்பாடு காரணமாக சுமார் 50- க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, இஸ்ரோவின் டெலிமெட்ரி ட்ராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க் இயக்குனர் அனில் குமார் கூறுகையில், ரேடியோ தொடர்பு இழப்பு ஏற்படுவதற்கான உண்மையான வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் அனைத்து செயற்கைக்கோள்களும் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யவும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
உச்சத்தை எட்டிய எரிமலை வெடிப்புகள்
பூமியில் உள்ள நிலையங்கள் ஏற்கனவே மிஷன் கட்டுப்பாட்டு மையங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும், முரண்பாடுகளை கையாள தற்செயல் நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கடந்த பிப்ரவரி 3- ஆம் தேதி சூரியன் ஒரு பெரிய அளவிலான எரிமலையை வெளியிட்டது. இதற்கான படங்களை நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் பிடித்துள்ளது. கடந்த பிப்ரவரி 1 முதல் 2-ஆம் தேதி வரை எரிமலை வெடிப்புகள் உச்சத்தை எட்டியதாக நாசா உறுதிப்படுத்தியது. கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு இது மிகப் பெரிய சூரியன் எரிப்பு என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: ஆன்லைன் விளையாட்டால் நேர்ந்த சோகம்.. 3 சறுமிகள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம்.. நடந்தது என்ன?
சூரிய வெடிப்புகள் மூலம் மின் காந்த கதர்வீச்சு
இந்த சூரிய வெடிப்புகள் சூரியனின் அதிகபட்ச கட்டத்தின் ஒரு பகுதியாகும். இது சூரியனின் 11 ஆண்டு செயல்பாட்டு சுழற்சியின் உச்சகட்ட காலமாகும். அப்போது தான் இது போன்ற வெடிப்புகள் அடிக்கடி நிகழ்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும், சூரிய எரிமலை வெடிப்புகள் சில நிமிடங்களில் பூமியை அடையும் மிகப்பெரிய மின்காந்த கதிர்வீச்சு வெடிப்புகளை வெளியிடுகின்றன. இந்த கதிர்வீச்சுகள் மக்களுக்கு நேரடியாக தீங்கு விளைவிக்கவில்லை என்றாலும், பூமியின் மேல் வளிமண்டலத்தின் மின்சாரம் சாட் செய்யப்பட்ட அடுக்கான அயனோஸ்பியரை கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாகும்
இதனால், உயர் அதிர்வெண் ரேடியோ சிக்னல்கள், ஜிபிஎஸ் வழி செலுத்துதல், தொலைக்காட்சி சிக்னல்கள், ரேடார் அமைப்புகள் பாதிப்பை சந்திக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், தகவல் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை, பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் ஒளிபரப்பு ஆகியவற்றுக்கு செயற்கைக்கோள்களை பெரிதும் நம்பியுள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு இது போன்ற இடையூறுகள் ஒரு பெரிய பின்னடைவாகும். இது செயற்கைக்கோள்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது .
மேலும் படிக்க: நாடு முழுவதும் அதிகரித்த ரயில் தாமதங்கள்.. வெளியான ஷாக் தகவல்!!