அதிர்ஷ்டமாக கருதப்பட்ட 1206 எண்.. முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் கடைசி பயணமாக அமைந்த சோகம்..
Vijay Rupani: நேற்று நடந்த ஏர் இந்திய விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். 1206 என்ற எண் அதிர்ஷ்டமாக கருதப்பட்ட நிலையில் நேற்று 12/06 அவரது விதியை மாற்றி அமைக்கும் வகையில் இந்த கோரமான விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ருபானி (Gujarat Ex Chief Minister Vijay Rupani) ஜூன் 12 2025 அன்று நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் (Air India Plane Crash) உயிரிழந்தார். விஜய் ரூபானிக்கும் 1206 என்ற எண்ணிற்கும் ஒரு பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. விஜய் ருப்பானியுடன் 1206 என்ற எண் எப்போதுமே உடன் இருக்கும், அது அவரது அதிர்ஷ்ட எண் ஆகவும் கருதப்பட்டது. அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் விஜய் ரூபானி பயணித்தது குறிப்பிடத்தக்கது. அவர் லண்டனில் இருக்கும் தனது மனைவி மற்றும் மகளை சந்திக்க சென்று கொண்டிருந்த போதுதான் இந்த கோரமான விபத்து நடந்து அவர் அதில் உயிரிழந்துள்ளார்.
அதிர்ஷ்ட எண் 1206:
Vijay Rupani & the mystery of 12 🧿
🔹 Lucky number – 1206
🔹 Scooty plate – 1206
🔹 All car numbers – 1206
🔹 Boarding time – 12:10
🔹 Ticket serial – 12
🔹 Seat number – 12
🔹 Reported death date – 12/06Coincidence or cosmic code? 🤯#VijayRupani #1206Mystery #Numerology… pic.twitter.com/wtM20IrIPJ
— Madhuri Adnal (@madhuriadnal) June 12, 2025
அவரது அனைத்து வாகனங்களில் அதாவது கார் இரு சக்கர வாகனம் உட்பட அனைத்து வாகனங்களின் பதிவு பலகையிலும் 1206 என்ற எண் இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த எண் அவருக்கு அதிர்ஷ்டமானதாக கருதப்பட்ட நிலையில் நேற்று அதாவது 12/06 தேதி யாரும் எதிர்பாக்காத வகையில் விதியை மாற்றி எழுதியதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். பல ஆண்டு காலமாக 1206 என்ற எண் அவரைப் பின்தொடர்ந்த நிலையில் 12/06 அதனை மாற்றி அவரின் இறுதி பயணமாக மாற்றியது.
எளிமை மற்றும் மக்கள் சேவைக்காக அறியப்பட்டவர்:
ஜூன் ஐந்து முதல் 12 வரை அவர் லண்டனில் இருக்க திட்டமிட்டு இருந்தார். பாஜகவை சேர்ந்த சுனில் ஜாக்கர் இது தொடர்பாக பேசுகையில், முதலில் விஜய் ரூபாணி ஜூன் 5ஆம் தேதி தனது மனைவியுடன் லண்டன் செல்ல திட்டமிட்ட இருந்ததாகவும். ஆனால் லூதியானா மேற்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக தனது பயணத்தை மாற்றி திட்டமிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ராஜ்கோட்டில் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி அவர் மக்களுக்கு செய்த சேவைகள்காக அறியப்பட்டார்.
இந்த துயரமான செய்தி மிகவும் வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் முன்னாள் முதலமைச்சராக இருந்தாலும் மிகவும் எளிமையான மனிதர் என்றும் எப்போது உதவி கேட்டாலும் அதனை செய்ய தயாராக இருந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவர் பதவி காலத்தில் பல முக்கிய வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தவர். குறிப்பாக புதிய விமான நிலையம், எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்டவை அடங்கும். விஜய் ரூபானியின் மறைவை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது மருமகன் மெஹுல் ரூபானி அவரது மறைவு தொடர்பாக பேசுகையில், ” இந்த செய்தியை கேட்டு ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. அவரது மனைவி மற்றும் மகள் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வருவதாகவும் மற்ற உறவினர்களும் அமெரிக்காவிலிருந்து இறுதி சடங்கிற்காக வருவதாகவும். அரசின் அறிவுரைப்படி அவரது இறுதி சடங்கு மேற்கொள்ளப்படும் ” எனவும் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2 1956-ல் மியான்மார் யங்கோனில், ஜெயின் குடும்பத்தில் விஜய் ருபானி பிறந்தார். அவர் 1960 இல் ராஜ்கோட் மாநிலத்திற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.