AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம்.. எரிபொருள் விநியோகம் முதல் இந்தியர்களின் பாதுகாப்பு வரை முழுமையான நடவடிக்கைகள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற வதந்திகளை மத்திய அரசு மறுத்துள்ளது. நாட்டின் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் தேவையான அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்கின்றன என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா முழுவதும் துறைமுக செயல்பாடுகள் இயல்பாக நடைபெற்று வருகின்றன. எந்தவித தடையும் அல்லது நெரிசலும் பதிவாகவில்லை என்றும் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம்.. எரிபொருள் விநியோகம் முதல் இந்தியர்களின் பாதுகாப்பு வரை முழுமையான நடவடிக்கைகள்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Mar 2026 20:06 PM IST

மார்ச் 29, 2026: மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, இந்திய அரசு தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு, பல்வேறு துறைகளில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற வதந்திகளை மத்திய அரசு மறுத்துள்ளது. நாட்டின் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் தேவையான அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்கின்றன என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா முழுவதும் துறைமுக செயல்பாடுகள் இயல்பாக நடைபெற்று வருகின்றன. எந்தவித தடையும் அல்லது நெரிசலும் பதிவாகவில்லை என்றும் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிசக்தி – எரிபொருள் நிலை:

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள சூழ்நிலையில் கூட, நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி. கிடைப்பில் குறைவு இல்லை. அனைத்து ரிபைனரிகளும் முழு திறனில் இயங்கி வருகின்றன. பெட்ரோல், டீசல் போதுமான கையிருப்பில் உள்ளது.

  • பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு ரூ. 10 வரை வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது
  • டீசல் மற்றும் விமான எரிபொருளுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது
  • சில இடங்களில் வதந்திகளால் “பேனிக் பையிங்” நடந்தாலும், எரிபொருள் பற்றாக்குறை இல்லை

இயற்கை எரிவாயு – எல்.பி.ஜி.:

  • வீட்டு பயன்பாட்டிற்கு முழு அளவில் விநியோகம்
  • தொழில்துறைக்கு 80% வரை விநியோகம்
  • PNG இணைப்புகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை
  • எல்.பி.ஜி. சிலளவு பாதிப்பு இருந்தாலும், விநியோகம் வழக்கம்போல் நடைபெறுகிறது
  • தினசரி 55 லட்சத்திற்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன

கூடுதல் நடவடிக்கைகள்:

  • கெரோசின் கூடுதல் ஒதுக்கீடு
  • கருப்பு சந்தை தடுக்கும் வகையில் ஆய்வுகள் (சுமார் 2900 சோதனைகள்)
  • எரிசக்தி சேமிக்க பொதுமக்களுக்கு அறிவுரை

கடல் போக்குவரத்து பாதுகாப்பு:

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் தெரிவித்ததாவது:

  • இந்திய கப்பல்கள் மற்றும் கடற்படையினர் பாதுகாப்பாக உள்ளனர்
  • இந்தியாவிற்கு எல்.பி.ஜி. ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பாதுகாப்பாக பயணிக்கின்றன
  • நாடு முழுவதும் துறைமுக சேவைகள் இயல்பாக செயல்படுகின்றன

வெளிநாட்டிலுள்ள இந்தியர்கள் பாதுகாப்பு:

வெளிவிவகார அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது:

  • 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டில் உள்ளது
  • இந்தியர்களுக்கு உதவி, ஆலோசனை வழங்கப்படுகிறது
  • பிப்ரவரி இறுதியிலிருந்து சுமார் 5.24 லட்சம் பேர் இந்தியா திரும்பியுள்ளனர்
  • விமான சேவைகள் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

 பொதுமக்களுக்கு அறிவுரை:

  • வதந்திகளை நம்ப வேண்டாம்
  • தேவையற்ற எரிபொருள் சேமிப்பு தவிர்க்கவும்
  • எரிசக்தி சேமிப்பை கடைப்பிடிக்கவும்

மொத்தத்தில், மேற்கு ஆசிய பதற்றத்தையும் மீறி, இந்திய அரசு நாட்டின் எரிசக்தி, போக்குவரத்து மற்றும் குடிமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

Follow Us