World Worst Plane Crashes: ஏர் இந்தியா விமானம் விபத்து.. உலகில் இதுவரை நடந்த மோசமான விபத்து பற்றி தெரியுமா..?
Air India Accident: அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், உலக வரலாற்றில் நிகழ்ந்த மோசமான விமான விபத்துகளை நினைவு கூர்ந்தது. டெனெரிஃப் விபத்து, ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 123, மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் 17 போன்ற பயங்கர விபத்துகளின் விவரங்கள் இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

அகமதாபாத், ஜூன் 12: 2025 ஜூன் 12ம் தேதியான இன்று அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு (Ahmedabad Airport) அருகில் ஏர் இந்தியா (Air India) பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் 242 பயணிகளுடன் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறை உறுதிப்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க டிஜிசிஏ டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் உலகம் முழுவதும் பல மறக்கமுடியாத மோசமான நினைவுகளை கொடுத்துள்ளது. அதன்படி, மிகவும் கொடிய விபத்துகளில் சிலவற்றை பற்றி விரிவாக பார்ப்போம்.
டெனெரிஃப் விமான நிலைய பேரழிவு (1977):
டெனெரிஃப் விமான நிலைய விபத்து விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்தாக பார்க்கப்படுகிறது. இந்த விபத்தில் சுமார் 583 பேர் உயிரிழந்தனர். தவறான தகவல் தொடர்பு காரணமாக 2 போயிங் 747 விமானங்கள் ஓடுபாதையில் மோதிக்கொண்டன.




ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 123 (1985):
ஜப்பான் ஏர்லைன்ஸின் ஒற்றை விமான விபத்து 520 பேரைக் கொன்றது. இதற்குக் காரணம், முந்தைய பழுதை சரியாக சரிசெய்தாததும்ம் விமானத்தின் பின்புற அழுத்த பல்க்ஹெட்டின் கட்டமைப்பு செயலிழப்பு காரணம் என்றும் கூறப்படுகிறது.
நடுவானில் மோதிய சார்கி தாத்ரி விமானம் (1996):
கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் விமானத்திற்கும், சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் விமானத்திற்கும் இடையிலான இந்த நடுவானில் மோதியதில் விமானத்தில் இருந்த 349 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கு தவறான விமானத் திட்டங்கள் மற்றும் தவறான தகவல் தொடர்பு உள்ளிட்ட காரணங்களே காரணம் கூறப்படுகிறது.
ஏர் பிரான்ஸ் விமானம் 447 (2009):
ஏர்பஸ் A330 அட்லாண்டிக் பெருங்கடலில் மோதியதில், அதில் இருந்த 228 பேரும் உயிரிழந்தனர். தவறான விமான வேக அளவீடுகள் மற்றும் விமானியின் தவறு உள்ளிட்ட காரணங்களாக கூறப்படுகிறது.
மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் 17 (2014):
Malaysia Airlines Flight #MH17 crash site in Ukraine. Plane was carrying 295 people. (Photo via Reuters) pic.twitter.com/3eXy62ADM6
— ABS-CBN News Channel (@ANCALERTS) July 17, 2014
மலேசியா ஏர்லைன்ஸின் போயிங் 777 கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது.இதில் பயணம் மேற்கொண்ட 298 பேரும் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் சர்ச்சைக்குரியது. ஆனால் அது தரையிலிருந்து வான் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பரவலாக நம்பப்படுகிறது.
ஏர் இந்தியா விமானம் 182 (1985):
ஏர் இந்தியா விமானத்தின் போயிங் 747 விமானம் அயர்லாந்து கடற்கரையில் குண்டுவீசித் தகர்க்கப்பட்டது. இதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர். குளோபல் ஆர்டரின் அறிக்கையின்படி, இந்த குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத அமைப்பால் பொறுப்பேற்றதாக கூறப்படுகிறது.
துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் 981 (1974):
துருக்கி ஏர்லைன்ஸின் போயிங் 747 பாரிஸுக்கு வெளியே விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 346 பேரும் மரணித்தனர். இந்த விபத்திற்கு எமர்ஜென்சி கதவு செயலிழந்ததே காரணம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 587 (2001):
அமெரிக்கன் ஏர்லைன்ஸின் மெக்டோனல் டக்ளஸ் MD-82, புறப்பட்ட சில நிமிடங்களில் நியூயார்க்கின் குயின்ஸில் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 260 பேரும் தரையில் இருந்த 5 பேரும் கொல்லப்பட்டனர். கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.