Ahmedabad Plane Crash: விமானத்தில் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஒருவர்.. விபத்து குறித்து உருக்கமாக பேச்சு!
Air India Plane Crash: அகமதாபாத் விமான விபத்தில் அனைத்து பயணிகளும், விமான ஊழியர்களும் இறந்துவிட்டதாக அகமதாபாத் காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 242 பேரில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று அகமதாபாத் கமிஷனர் ஜி.எஸ்.மாலிக் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அகமதாபாத், ஜூன் 12: 2025 ஜூன் 12ம் தேதியான இன்று பிற்பகல் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் (Air India Plane Crash) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விமானமானது அகமதாபாத் மேகனா நகரில் உள்ள பிஜே மருத்துவ கல்லூரி (BJ Medical College) விடுதி மேல் மோதி வெடித்து சிதறியது. இந்தநிலையில், அகமதாபாத் விமான விபத்தில் (Ahmedabad Plane Crash) அனைத்து பயணிகளும், விமான ஊழியர்களும் இறந்துவிட்டதாக அகமதாபாத் காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 242 பேரில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று அகமதாபாத் கமிஷனர் ஜி.எஸ்.மாலிக் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அகமதாபாத் போலீஸ் ஜி.எஸ். மாலிக் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவிக்கையில், “விமான விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று தெரிகிறது. விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதால், சில உள்ளூர்வாசிகளும் இறந்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.
விமானத்தில் இருந்த 242 பயணிகளும் உயிரிழந்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. விமானம் மதியம் 1.38 மணிக்கு லண்டனுக்குப் புறப்பட்டது. AI-171 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ், 7 போர்ச்சுகல் மற்றும் 1 கனடா உட்பட மொத்தம் 242 பேர் இருந்தனர்.




விபத்தில் உயிர் தப்பிய நபர்:
Speaking to ANI on a phone call, Ahmedabad Police Commissioner GS Malik says, “The police found one survivor in seat 11A. One survivor has been found in the hospital and is under treatment. Cannot say anything about the number of deaths yet. The death toll may increase as the… pic.twitter.com/MZp1ngYgC6
— ANI (@ANI) June 12, 2025
முன்னதாக, விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மட்டும் தற்போது உயிர் தப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டனை சேர்ந்த 40 வயதான விஷ்வாஸ் குமார் ரமேஷ் உயிர் தப்பியுள்ளார். இரத்த காயங்களுடன் அவர் நடந்து செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விஷ்வாஸ் குமார் கூறுகையில், “மேலே எழும்பிய சில நொடிகளில் பலத்த சப்தம் கேட்டதுடன் விமானம் கீழே விழுந்தது. நான் கண் விழித்து பார்க்கும்போது, சுற்றிலும் சடலங்கள் கிடந்தன. பயத்தில் எழுந்து ஓடினேன்” என்றார்.
வெளியுறவு அமைச்சகம் இரங்கல்:
#WATCH | Air India Plane Crash | Delhi: Replying to a question by ANI, MEA Spokesperson Randhir Jaiswal says, “What has happened in Ahmedabad is a very tragic accident. We have lost a lot of people. We extend our deepest condolences to all those who have lost their loved ones.… pic.twitter.com/H5zaotV0Q9
— ANI (@ANI) June 12, 2025
இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ”அகமதாபாத்தில் நடந்தது மிகவும் துயரமான விபத்து. நாம் அனைவரும் நிறைய பேரை இழந்துவிட்டோம். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விபத்தில் பல வெளிநாட்டினரும் சிக்கியுள்ளனர். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், ஏர் இந்தியா மற்றும் பிற துறைகள் தற்போது விபத்து குறித்து அப்டேட் வெளியிட்டு வருகிறது. இதுதான் நான் பகிர்ந்து கொள்ளக்கூடிய சமீபத்திய விஷயம். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சரியான விவரங்கள் வெளியிடப்படுவதற்கு நாம் இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.