Gujarat Former CM Vijay Rupani: அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய முன்னாள் முதல்வர்.. அதிர்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள்!

Ahmedabad Air India Plane Crash: அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா போயிங் 787 விமானம் ஜூன் 12, 2025 அன்று விபத்துக்குள்ளானது. 242 பயணிகள் மற்றும் குழுவினர் இருந்தனர். முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் இந்த விமானத்தில் இருந்தார். விமானம் ஓடுபாதையை விட்டு சிறிது தூரம் சென்ற பின் விபத்துக்குள்ளானது.

Gujarat Former CM Vijay Rupani: அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய முன்னாள் முதல்வர்.. அதிர்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள்!

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி

Published: 

12 Jun 2025 15:38 PM

அகமதாபாத், ஜூன் 12: அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லவாய் படேல் சர்வதேச விமான நிலையம் (Sardar Vallabhbhai Patel International Airport) அருகே இன்று அதாவது 2025 ஜூன் 12ம் தேதி 242க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் (Air India Plane Crash) விபத்துக்குள்ளானது. லண்டன் நோக்கி சென்ற போயிங் 787 ட்ரீமிலைனர், புறப்படும் போது மதியம் 1.39 மணிக்கு விபத்துக்குள்ளானது. இதனால், மேகனிநகர் அருகே பெரும் புகை கிளம்பியது. விமானத்தில் 2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என 242 பேர் இருந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (Directorate General of Civil Aviation) உறுதிப்படுத்தியது. இந்த விமானம் கேப்டன் சுமீத் சபர்வால் தலைமையில் கிளைவ் குந்தர் ஆகியோர் விமானத்தை இயக்கியுள்ளனர். மேலும், இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணம் மேற்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்:

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் கூற்றுப்படி, விமானம் அகமதாபாத்திலிருந்து 1.39 மணிக்கு ஓடுபாதை 23ல் இருந்து புறப்பட்டது. முதலில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், ஏர் இந்தியா விமானத்திற்கு அழைப்பு விடுத்தது. ஆனால், அதன்பிறகு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தி அழைப்புகளுக்கு விமானத்தால் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதை தொடர்ந்து, ஓடுபாதை 23ல் இருந்து புறப்பட்ட உடனேயே, விமான நிலைய சுற்றளவுக்கு வெளியே விமானம் தரையில் விழுந்தது. விபத்து நடந்த இடத்திலிருந்து கடுமையான கரும் புகை மற்றும் சத்தத்தை தொடர்ந்து விபத்து குறித்த செய்தி பரவ தொடங்கியது. இந்த விமானத்தில் 242 பயணிகல் இருந்தனர். அனைவரும் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.

ஆரம்ப தகவல்களின்படி, இந்த துயர விபத்து சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தின் கட்டிட சுவரில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. வெளிவந்துள்ள ஆரம்ப படங்களில், விமானம் துண்டு துண்டாக சிதறியிருப்பதைக் காணலாம். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி:


கிடைத்த தகவலின்படி, குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனுடன், அவரின் டிக்கெட் குறித்தான விவரங்களும் வெளியாகியுள்ளது. குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி தனது மகளைச் சந்திக்க லண்டன் செல்வதாக திட்டமிட்டிருந்தார். இந்த விமானத்தில் அவரது குடும்பத்தில் இருந்து அவர் மட்டுமே பயணம் மேற்கொண்டுள்ளார்.

மீட்பு படைகள் தீவிரம்:

விமானத்தின் ஒரு இறக்கை உடைந்து விழுந்திருப்பதும், அதில் ஏற்பட்டுள்ள தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை தெளித்து தீயை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். தற்போது தீ ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், விமானத்தின் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன. விமானம் விழுந்த கட்டிடமும் சேதமடைந்துள்ளது.