AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்திய ராணுவ வீரர்களுக்கான ஹத யோகா பயிற்சி.. ஈஷா யோகா மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்..

இந்த முயற்சி, நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்புப் படையினருக்கு பாரம்பரிய ஹத யோக அறிவை வழங்க வேண்டும் என்ற சத்குரு அவர்களின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது.  பயிற்சியில் கலந்து கொண்ட அதிகாரிகள், இந்த பயிற்சி யோகாவை ஒரு சக்திவாய்ந்த உள்ளார்ந்த தொழில்நுட்பமாக அனுபவிக்க உதவியது என தெரிவித்தார். இது உடல் தாங்கும் திறன், மன தெளிவு மற்றும் உணர்ச்சி சமநிலையை மேம்படுத்துகிறது என கூறினர்.

இந்திய ராணுவ வீரர்களுக்கான ஹத யோகா பயிற்சி..  ஈஷா யோகா மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 06 Apr 2026 15:59 PM IST

ஏப்ரல் 6, 2026: சத்குரு குருகுலம் நடத்திய இந்திய பாதுகாப்புப் படையினருக்கான 15 நாள் பாரம்பரிய ஹத யோகா “Train the Trainer” பயிற்சி திட்டம் இன்று ஈஷா யோகா மையத்தில் நிறைவடைந்தது. இந்த பயிற்சியில் மொத்தம் 99 பாதுகாப்புப் படை வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 78 பேர் இந்திய கடற்படையிலிருந்தும், 21 பேர் இந்திய ராணுவத்திலிருந்தும் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் தீவிரமான பயிற்சியை முடித்து, தங்களது தளங்களில் உள்ள மற்ற படைவீரர்களுக்கும் இந்த யோகப் பயிற்சிகளை கற்பிக்க தயாராக உள்ளனர் என தெரிவித்தனர்.

மார்ச் 23 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற்ற இந்த பயிற்சியில், உபா யோகா, சூர்ய க்ரியா, அங்கமர்தனா மற்றும் Inner Engineering Online போன்ற பாரம்பரிய யோகப் பயிற்சிகள் ஆழமாக கற்பிக்கப்பட்டன. இந்த பயிற்சிகள் மூலம் உடல் மாற்றம், உள்ளார்ந்த சமநிலை மற்றும் இந்த அறிவை மற்றவர்களுடன் பகிரும் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என்ன?

இந்த முயற்சி, நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்புப் படையினருக்கு பாரம்பரிய ஹத யோக அறிவை வழங்க வேண்டும் என்ற சத்குரு அவர்களின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது.  பயிற்சியில் கலந்து கொண்ட அதிகாரிகள், இந்த பயிற்சி யோகாவை ஒரு சக்திவாய்ந்த உள்ளார்ந்த தொழில்நுட்பமாக அனுபவிக்க உதவியது என தெரிவித்தார். இது உடல் தாங்கும் திறன், மன தெளிவு மற்றும் உணர்ச்சி சமநிலையை மேம்படுத்துகிறது என கூறினர்.

ஸ்ரீகாந்த் ஜோஷி  (கேப்டன், இந்திய கடற்படை) கூறுகையில், “இந்த ஹத யோகா ஆசிரியர் பயிற்சி மூன்று முக்கிய நன்மைகளை வழங்குகிறது: உடல் வலிமை, மன அமைதி மற்றும் உள்ளார்ந்த ஆராய்ச்சி. இந்த உள்ளார்ந்த அமைதியை வளர்த்துக் கொண்டால், ஒருவர் சூழ்நிலைகளை தெளிவாக உணர்ந்து, அழுத்தமான சூழல்களிலும் அமைதியாக செயல்பட முடியும்” என தெரிவித்தார். அவர் மேலும், இந்த பயிற்சி தங்களது பிரிவுகளில் உள்ள பலருக்கும் இந்த பயிற்சிகளை கொண்டு செல்லும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது என தெரிவித்தார்.

ராகுல் ஜெய்ஸ்வால் (கமாண்டர்) கூறுகையில், “யோகாவின் உண்மையான அர்த்தம் வெளியில் அல்ல, உள்ளே பார்க்கும் செயலாகும். நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ‘Inner Engineering’ தான்” என தெரிவித்தார். இந்த பயிற்சி தங்களை நன்றாக புரிந்துகொள்ளவும், மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது என தெரிவித்தார்.

யோகப் பயிற்சிகளுக்கு அப்பாற்பட்டு, பங்கேற்பாளர்கள் ஈஷா வித்யா பள்ளியையும் பார்வையிட்டனர். மேலும் ஆசிரமத்தையும் சுற்றிப் பார்த்ததுடன், தியான லிங்கம், லிங்க பைரவீ தேவி மற்றும் தீர்த்தகுண்டங்களில் நேரம் செலவிட்டனர்.  நன்றியறிதலின் அடையாளமாக, பங்கேற்பாளர்கள் Biksha Hall-ல் அன்னதானம் வழங்கி, சாதகர்களுக்கு உணவு வழங்கினர்.

தனது நினைவில் நிற்கும் அனுபவத்தை பகிர்ந்த ஸ்ரீகாந்த் ஜோஷி கூறுகையில்,
“இஷா மையத்தில் கிடைத்த பராமரிப்புக்கு நன்றி செலுத்தும் வகையில், அன்னதானம் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. பிறருக்கு உணவு வழங்கிய அந்த அனுபவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியையும் இணைப்பையும் அளித்தது” என தெரிவித்தார்.

Follow Us