Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.1,464 கோடி போலி ஜிஎஸ்டி பில்…மோசடி முயற்சியில் 4 பேர் கைது…அமலாக்கத்துறை நடவடிக்கை!

Rs 1464 Crore Fake GST Invoices: தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் ரூ. 1464 கோடிக்கு போலியான ஜி. எஸ். டி. பில்களை போலியாக செயல்பட்டு வந்த நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 4 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

ரூ.1,464 கோடி போலி ஜிஎஸ்டி பில்…மோசடி முயற்சியில் 4 பேர் கைது…அமலாக்கத்துறை நடவடிக்கை!
ரூ.1464 கோடி போலி ஜிஎஸ்டி பில் மோசடி
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 05 Jan 2026 12:19 PM IST

கர்நாடகா மாநிலம் மற்றும் தமிழகத்தில் சிமெண்ட், இரும்பு மற்றும் எஃகு போன்ற கட்டுமான பொருட்களுக்கு விலை பட்டியல்களை போலி நிறுவனங்கள் வெளியிட்டு வருவதாக புகார் எழுந்தது. இதில், பொருட்கள் குறித்த முழு விவரம் இல்லாமல் சுமார் ரூ,355 கோடி மதிப்பிலான உள்ளிட்டு வரி கடனை சட்டவிரோதமாக கோருவதற்கும், புழக்கத்தில் விடுவதற்கும் அதி நவீன கோரசல் மோசடியை அமலாக்க துறை கண்டுபிடித்தது. இந்த விவகாரத்தில் துறையின் உண்மையான வரி செலுத்துவோர் அல்லாத தொகுதி மற்றும் ஜி எஸ் டி அலுவலகத்தில் இருந்து ஐ பி எல் முகவரி உள்ளிட்டவை அடங்கும். இந்த தரவு இணைக்கப்பட்ட நிறுவனங்களுக்கிடையே வட்ட விலை பட்டியல் வடிவங்கள் மற்றும் அசாதாரண ஐ டி சி குறித்த தகவல் தெரியவந்தது.

போலி ஆவணங்கள் மூலம் ஜிஎஸ்டி பதிவு

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி பல்வேறு ஜிஎஸ்டி பதிவுகளை பெற்றுள்ளனர். இதில், ஆன்லைனில் வாங்கிய முத்திரைத்தாள்கள், போலி குத்தகை பத்திரங்கள், போலி கையெழுத்துகள், போலி வரி ரசீதுகள், போலி நோட்டரி முத்திரைகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த பதிவுகள் போலியான பில்களை உருவாக்கும் ஷெல் நிறுவனங்களின் அடுக்குகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டவை ஆகும்.

மேலும் படிக்க: 15 நாட்கள் துப்பாக்கிச்சூடு பயிற்சி.. மனைவியை சுட்டுக்கொலை செய்த கணவன்!

ஜிஎஸ்டி பதிவுகளை தாமாக முன்வந்து ரத்து

இது தொடர்பாக கணிசமான கடன்களை திரும்ப பெற்ற பிறகும், பல்வேறு நிறுவனங்களில் கணக்கு தணிக்கைகளை தவிர்க்கவும், டிஜிட்டல் தடங்களை அளிக்கவும், தங்கள் ஜிஎஸ்டி பதிவுகளை தானாக முன்வந்து ரத்து செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெங்களூரு, சென்னை, வேலூர் மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் 24 செல்போன்கள், 51 சிம் கார்டுகள், 2 பென் டிரைவ்கள், வங்கி அறிக்கைகள் மற்றும் போலி நிறுவனங்களுடன் தொடர்புடைய ரப்பர் ஸ்டாம்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

4 பேர் கைது

இந்தச் சம்பவத்தில் தமிழ்நாடு வணிகவரி அதிகாரிகளின் உதவியுடன் செயல்பட்டதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ட்ரையன் டிரேடர்ஸ், வொண்டர் டிரேடர்ஸ், ராயல் டிரேடர்ஸ் மற்றும் கேலக்ஸி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட போலி நிறுவனங்களுடன் தொடர்புடைய தமிழ்நாட்டை சேர்ந்த இர்பாஸ் அகமது, நஃபிஸ் அகமது ஆகியோர் பேரணாம்பட்டில் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூர் சிறையில் அடைப்பு

பெங்களூருவில் பவர் ஸ்டீல் அண்ட் சிமெண்ட், பி ஆர் கன்ஸ்ட்ரக்சன், எஸ்.வி. டிரேடர்ஸ் மற்றும் எஸ் ஆர் எஸ் சிமெண்ட் ஸ்டீல் டிரேடர்ஸ் போன்ற ஷெல் நிறுவனங்களுடன் தொடர்புடைய எட்டாலா பிரதாப் மற்றும் அவரது கூட்டாளி ரேவதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெங்களூரில் உள்ள பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஞ்சநேயர் படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க: திரிபுரா, அசாம் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்!