AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தும்மலை அடக்கினால் என்ன நடக்கும் தெரியுமா? மருத்துவர்கள் எச்சரிக்கை

Medical Experts Say : பொது இடங்களில் நாகரிகம் கருதி நம்மில் பெரும்பாலானோர் தும்மலை அடக்குகிறோம். இது உடலுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். தும்மல் என்பது மூக்கில் தூசி, பாக்டீரியா, வைரஸ் போன்றவை நுழையும் போது, உடல் அதற்கு ஆற்றும் எதிர்வினையாகும்.

தும்மலை அடக்கினால் என்ன நடக்கும் தெரியுமா? மருத்துவர்கள் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Aug 2025 23:11 PM IST

தும்மல் என்பது ஒரு இயற்கையான எதிர்வினை. தூசி, புகை, வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் நம் மூக்கல் நுழையும்போது  ​​மூளை அதை அச்சுறுத்தலாகக் கருதி, நுரையீரலில் இருந்து வலுவான காற்றால் அதை வெளியேற்ற ஒரு சமிக்ஞையை அளிக்கிறது. அதுதான் தும்மல். தும்மல் நமக்கு மிகவும் நல்லது. பொது இடங்களில் நாகரிகம் கருதில் மூக்கு மற்றும் வாயை மூடி தும்மலை அடக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இது உடல் ஆரோக்கியத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தும்மலை வலுகட்டாயமாக நிறுத்துவதன் மூலம் நுரையீரல் முதல் காதுகள் வரை பிரச்னைகள் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நீங்கள் தும்மலை அடக்கினால் ஏற்படும் ஆபத்து

பொதுவாக, நீங்கள் தும்மும்போது உடலில் அதிக அழுத்தம் செலுத்தப்படுகிறது. ஆனால் நீங்கள் தும்மலை அடக்க முயற்சித்தால், இந்த மன அழுத்தம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரிக்கிறது. குறிப்பாக ஆண்களில், அவர்களின் தும்மலின் சத்தமும் அதிக நுரையீரல் திறன் காரணமாக சத்தமாக இருக்கும். அதாவது, தும்மலின் சத்தம் நுரையீரலின் திறனைப் பொறுத்தது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தும்மலை நீங்கள் அடக்கினால், அது இன்னும் ஆபத்தானது.

இதையும் படிக்க : காலை முதல் இரவு வரை.. ஷூக்குள் சிறைப்படும் கால்கள்..! கால் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது எப்படி?

தும்மலை அடக்குவதன் தீமைகள்

  • தும்மலை அடக்குவது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி மூச்சுக்குழாய் அமைப்பை சேதப்படுத்தும்.
  • தும்மலை அடக்கும்போது, மூக்கு வழியாக வெளியேற வேண்டிய காற்று காதுக்குள் தள்ளப்படுகிறது. இது கேட்கும் திறனை பாதிக்கும்.
  • கண்ணில் அழுத்தம் அதிகரித்து, கண்ணில் உள்ள இரத்த நாளங்கள் சிவந்து சேதமடையும் அபாயம் உள்ளது.
  • தும்மலை அடக்குவது மூக்கு மற்றும் தொண்டையில் கிருமிகள் சிக்கி, தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.
  • தலையில் அழுத்தம் அதிகரித்து, கடுமையான தலைவலி மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்தும்.

இதையும் படிக்க : இளம் வயதிலேயே எலும்பு பலவீனம்.. எலும்பு தேய்மானத்தின் காரணங்களும், தீர்வுகளும்..!

மருத்துவர்களின் கூற்றுப்படி, தும்மல் என்பது உடலை சுத்தப்படுத்தும் ஒரு இயற்கையான செயல்முறையாகும். காற்றில் உள்ள தூசி, அழுக்கு போன்ற தேவையற்ற பொருட்கள் மூக்கில் நுழையும் போது, ​​அவற்றை வெளியேற்ற உடல் தும்முவதன் மூலம் அதனை வெளியேற்றுகிறது. அதனால்தான் தும்மலை அடக்குவது சரியான முறை அல்ல.

நீங்கள் தும்மும்போது, ​​உங்கள் மூக்கு மற்றும் வாயை ஒரு கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரால் மூடுங்கள். பின்னர் உங்கள் கைகளை நன்கு கழுவுவது நல்லது. இதைச் செய்வதன் மூலம், மற்றவர்களுக்கு தொற்று பரவுவதைத் தடுக்கலாம். தும்மல் நிற்காமல் அதன் வேலையைச் செய்ய அனுமதிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Follow Us