AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Rabies Prevention: இந்தியாவில் அதிகரிக்கும் ரேபிஸ் நோய் பாதிப்பு.. தடுக்க என்ன செய்யலாம்..?

Dog Bite Rabies: சமீபத்தில் உத்தரபிரதேசம் மற்றும் கேரளாவில் ரேபிஸ் நோயால் ஏற்பட்ட இறப்புகளைத் தொடர்ந்து, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அவசர ஆலோசனைகளை வழங்கியுள்ளது. நாய் கடி காயங்களை அடையாளம் காணுதல், ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ரேபிஸ் என்பது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் கொடிய வைரஸ் நோய். பாதிக்கப்பட்ட விலங்குகளின் கடி மூலம் பரவும் இந்நோய், உடனடி சிகிச்சையின்றி மரணத்தை ஏற்படுத்தும்.

Rabies Prevention: இந்தியாவில் அதிகரிக்கும் ரேபிஸ் நோய் பாதிப்பு.. தடுக்க என்ன செய்யலாம்..?
ரேபிஸ் தடுப்பு முறைImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Jul 2025 18:00 PM IST

உத்தரபிரதேச மாநில அளவிலான கபடி வீரர் 22 வயதே ஆன பிரிஜேஷ் சோலங்கி சமீபத்தில் ரேபிஸ் (Rabies) நோயால் உயிரிழந்தார். அதேபோல், கேரளாவிலும் சமீபத்தில் ரேபிஸ் நோயால் 2 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் கடுமையான ஆலோசனைகளை வழங்கியது. நாய் கடி (Dog Bite) வகையை அடையாளம் காணவும், ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் (RIG) மற்றும் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி (ARV) உள்ளிட்ட போஸ்ட்-எக்ஸ்போஷர் ப்ரோபிலாக்ஸிஸ் (PEP) ஆகியவற்றை சரியான நேரத்தில் மற்றும் சரியாக அடையாளம் காணவும் உடனடி பயிற்சி தேவை என்பதை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ரேபிஸ் தொற்று என்றால் என்ன..?

ரேபிஸ் என்பது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு கொடிய வைரஸ் நோயாகும். இதன் அறிகுறிகள் தோன்றிய பிறகு உயிர்வாழும் வாய்ப்பு மிக குறைவுதான். ரேபிஸ் நோய் கண்டறியப்பட்டவுடன் தடுப்பூசி சரியாகவும், விரைவாகவும் வழங்கப்பட்டால் மட்டுமே உயிர்களை காப்பாற்ற முடியும். இது மூளையின் அடுக்குகளைப் பாதிக்கிறது, இதன் காரணமாக சில சூழ்நிலைகளில் நபர் மிகவும் விசித்திரமாக நடந்து கொள்ளத் தொடங்குகிறார், அதாவது தீவிர உடல் பிடிப்புகள் அல்லது குழப்பம் போன்றவை ஏற்படும். ரேபிஸின் ஆரம்ப அறிகுறிகள் காய்ச்சலின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். இது பல நாட்களுக்கு பிறகு குழப்பம், அதிவேகத்தன்மை, விழுங்குவதில் சிரமம், அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு, தூக்கமின்மை மற்றும் பகுதி பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ரேபிஸ் நோயால் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை ஏற்படுத்துகிறது. ஒரு மதிப்பீட்டின்படி, ரேபிஸால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 59,000 பேர் இறக்கின்றனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட விலங்குகள் கடித்த பிறகு தடுப்பூசி மற்றும் சிகிச்சை மூலம் ரேபிஸைத் தடுக்கலாம். இந்தியாவில் வெறிநாய்க்கடி நோயைத் தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், ஒவ்வொரு ஆண்டும் 5,700 பேர் வெறிநாய்க்கடி நோயால் இறக்கின்றனர்.

ரேபிஸ் நோய் எப்படி பரவுகிறது..?

ரேபிஸ் என்பது பாதிக்கப்பட்ட உமிழ்நீர் மூலம் மக்களுக்கு பரவுகிறது. ரேபிஸ் வைரஸ் பொதுவாக நாய்கள், பூனைகள் மற்றும் குரங்குகள் கடிப்பதன் மூலம் பரவுகிறது. இது தவிர, அதன் தொற்று வௌவால்கள், நரிகள் மற்றும் ரக்கூன்கள் மூலமாகவும் பரவலாம்.

தடுக்க என்ன செய்யலாம்..?

  • நீங்கள் விலங்குகளை வைத்திருந்தாலோ அல்லது ஏற்கனவே ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்தாலோ, நீங்கள் முன்கூட்டியே தடுப்பூசி போட வேண்டும். இது முதல் டோஸுக்குப் பிறகு ஏழாவது, 21 மற்றும் 28 வது நாட்களில் வழங்கப்படுகிறது.
  • ரேபிஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு விலங்கு உங்களைக் கடித்தால், சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்; இதற்காக, 5 டோஸ் தடுப்பூசி போடப்படும்.
  • ஒரு விலங்கு உங்களை கடித்தால் அல்லது விலங்குக்கு ரேபிஸ் இருப்பதாக சந்தேகித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சோதனை மேற்கொண்டு உரிய சிகிச்சை பெறுவது நல்லது.

Follow Us