AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இந்த பானம்.. இதை தயாரிப்பது எப்படி?

Mango leaf drink: மா இலைகள் சர்க்கரை நோய்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாம்பழம் என்பது நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ள ஒரு பழமாகும். மாம்பழம் உடலுக்கு 4 கிராம் வரை புரதத்தை வழங்குகிறது. கூடுதலாக, மாம்பழம் மற்றும் மா இலைகள் இன்சுலின் சிக்னல்களை மேம்படுத்த உதவுகின்றன.

Health Tips: சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இந்த பானம்.. இதை தயாரிப்பது எப்படி?
மா இலை டீImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Sep 2025 21:28 PM IST

இந்தியாவில் நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் (Diabetic patient) எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றன. சர்க்கரை நோயை பொறுத்தவரை பொதுவாக 2 வகையான சர்க்கரை நோய்கள் உள்ளன. வகை 1 சர்க்கரை மற்றும் வகை 2 சர்க்கரை. வகை 1 சர்க்கரை பொதுவாக மரபியல் காரணமாக பெற்றோரிடம் (Parents) இருந்து குழந்தைகளுக்கு வருகிறது. அதே நேரத்தில் வகை 2 சர்க்கரை நோய் வாழ்க்கை முறை மற்றும் உணவுக் காரணிகளால் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் இருக்கும்போது, ​​மக்கள் தங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை நோயை உணவு மற்றும் பல்வேறு முறைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். அந்தவகையில், சர்க்கரை நோயை ஓரளவு கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பானம் உள்ளது. அதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

இது என்ன பானம்?

மா இலைகள் சர்க்கரை நோய்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாம்பழம் என்பது நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ள ஒரு பழமாகும். மாம்பழம் உடலுக்கு 4 கிராம் வரை புரதத்தை வழங்குகிறது. கூடுதலாக, மாம்பழம் மற்றும் மா இலைகள் இன்சுலின் சிக்னல்களை மேம்படுத்த உதவுகின்றன. இதன் பொருள் உங்கள் செல்கள் குளுக்கோஸை சிறப்பாக எடுத்துக்கொள்ளும். எனவே, மா இலைகள் சர்க்கரை நோய்க்கு நல்லது. நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மா இலைகளிலிருந்து தேநீர் தயாரித்து குடிக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

ALSO READ: வாயில் இப்படியான அறிகுறிகளா..? தாமதம் வேண்டாம்! இது புற்றுநோயை குறிக்கும் அடையாளங்கள்!

மா இலை டீ செய்வது எப்படி..?

  1. மா இலை டீ தயாரிக்க, முதலில் உங்களுக்கு 5-6 மா இலைகளை எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு கழுவவும்.
  2. பின்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் அல்லது 2 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
  3. இப்போது, மா இலைகளை தண்ணீரில் சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் சூடாக்கவும்.
  4. மா இலைகள் நன்றாக வெந்ததும், ஒரு கிளாஸில் தண்ணீரை வடிகட்டவும்.
  5. பிறகு அதை தேநீர் போல குடிக்கவும். இந்த பானத்தை நீங்கள் தினமும் குடிக்கலாம். இவை ஆரோக்கியத்திற்கு சிறந்த வகையில் உதவி செய்யும்.

ALSO READ: அதிக புளிப்புடைய தயிர்.. நல்லதா? கெட்டதா..? யார் யார் சாப்பிடக்கூடாது?

மா இலையின் பிற நன்மைகள்:

  • மா இலைகள் வயிற்றுப்போக்கிற்கு நல்லது. அதன்படி, இலைகளை நன்றாக அரைத்து சாறு பிழிந்து கொள்ளலாம். இதில், சிறிது தேன் கலந்து குடித்தால் நன்மை பயக்கும்.
  • மா இலைகள் பார்வையை மேம்படுத்தப் பயன்படுகின்றன.மேலும், இவை கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
  • மா இலைகள் சருமத்திற்கும் நல்லது. வயதான விளைவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது. இது சரும அமைப்பை மேம்படுத்தி, அழகாகவும் மென்மையாகவும் மாற்ற உதவுகிறது.

Follow Us