Dates for Diabetes: சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம்பழத்தை சாப்பிடலாமா..? நிபுணர்கள் கூறுவது என்ன?
Diabetes Blood Sugar Control: சர்க்கரை நோயாளிகளுக்கு பேரீச்சம்பழம் நன்மை பயக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதிக நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. ஆனால் அதிக கலோரிகள் உள்ளதால் மிதமாக உட்கொள்ள வேண்டும்.
 
                                சர்க்கரை நோயாளிகள் (Diabetes) தங்கள் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் பெரும்பாலும் இனிப்பு பழங்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒரு ஆய்வின்படி, அத்தியாவசிய வைட்டமின்களை கொண்ட பழங்களை சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். அதன்படி, பேரீச்சை பழத்தில் (Dates) அதிக நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.
பேரீச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய காரணங்கள்:
பேரிச்சை பழத்தில் குறைந்த கிளை செமிக் குறியீடு உள்ளது. எனவே, மருத்துவர்கள் அவற்றை சாப்பிட அறிவுறுத்துகிறார்கள். இருப்பினும், பேரிச்சையை குறைந்த அளவிலேயே சாப்பிட வேண்டும் என்பது குறிப்பிட்டத்தக்கது. பேரீச்சம்பழத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ளது. பேரீச்சம்பழத்தில் செலினியம், தாமிரம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை நல்ல அளவில் உள்ளன. பேரீச்சம்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மன அழுத்தத்தைக் குறைக்கின்றன. இது சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இது உயர் இரத்த அழுத்தப் பிரச்சினையையும் நீக்குகிறது. பேரீச்சம்பழத்தில் பொட்டாசியமும் குறைவாக உள்ளது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
ALSO READ: உங்களுக்கு இந்த 5 உடல்நல பிரச்சனைகள் இருக்கா..? ஏன் மாதுளை சாப்பிடக்கூடாது தெரியுமா?
சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க பேரீச்சையை சாப்பிடுவது உதவுகிறது. மேலும், இது உடலுக்கு தேவையான சக்தியை உற்பத்தி செய்கிறது. பேரிச்சையை எதனுடனும் கலந்து சாப்பிடுவது அதிக நன்மை பயக்கும்.
உங்கள் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், எச்சரிக்கையுடன் பேரீச்சம்பழத்தை எடுத்துகொள்ள வேண்டும். அரை கப் பேரீச்சம்பழத்தை உட்கொண்டால், குறைந்தது 95 முதல் 100 கலோரிகள் உங்கள் உடலுக்குள் செல்லும். பேரிச்சையில் கலோரிகள் அதிகம் இருப்பதால், அவை ஆற்றலை வழங்குகின்றன. அவை எடை அதிகரிப்பிற்கும் வழிவகுக்கும். வலுவான நோய் எதிர்ப்பு சக்தி பல வகையான தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும். ஆனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால், நீங்கள் எளிதில் நோய்களுக்கு பலியாகிவிடலாம். பேரீச்சம்பழத்தில் இதுபோன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்:
தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடுவது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. சர்க்கரைக்கு பதிலாக பேரீச்சம்பழத்தை பயன்படுத்தலாம். பேரீச்சம்பழத்தை மிக்ஸியில் அரைத்து பொடி செய்து, அதை சாப்பிட்டால், இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
இரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தும்:
உங்கள் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால், நீங்கள் பேரீச்சம்பழத்தை உட்கொள்ளலாம். 3-4 பேரீச்சம்பழங்களை பாலில் கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தால், உங்கள் இரத்த அழுத்தம் சாதாரணமாக இருக்கும்.
ALSO READ: தினமும் இவற்றை சாப்பிட்டால் போதும்! உங்களுக்கு ஒருபோதும் மாரடைப்பு வராது..!
செரிமான ஆரோக்கியம்:
செரிமான குறைவாக உள்ளவர்கள் பேரீச்சையை உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த பேரீச்சை குடல்களை வலுப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்துகிறது. நார்ச்சத்து நிறைந்த பேரீச்சை மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. பேரீச்சை உடலின் பலவீனத்தை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
 
                        



 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                    