AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: உங்களுக்கு இந்த 5 உடல்நல பிரச்சனைகள் இருக்கா..? ஏன் மாதுளை சாப்பிடக்கூடாது தெரியுமா?

Pomegranate Health Risks: மாதுளை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், குறைந்த இரத்த அழுத்தம், அறுவை சிகிச்சைக்கு முன், ஒவ்வாமை, சர்க்கரை நோய் மற்றும் மருந்து உட்கொள்ளுதல் போன்ற சூழ்நிலைகளில் தீங்கு விளைவிக்கும். மாதுளையின் நன்மைகள் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகளை விளக்குகிறது.

Health Tips: உங்களுக்கு இந்த 5 உடல்நல பிரச்சனைகள் இருக்கா..? ஏன் மாதுளை சாப்பிடக்கூடாது தெரியுமா?
மாதுளை பக்க விளைவுகள்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Aug 2025 14:51 PM IST

மாதுளை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து (Iron Content) நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரத்த சோகையை குணப்படுத்தவும் உதவுகிறது. ஆனால், எல்லாருக்கும் இது நன்மை பயக்கும் என்று அர்த்தமல்ல. மாதுளை (Pomegranate) சிலருக்கு தீங்கு விளைக்கும். இந்த 5 பிரச்சனையை கொண்டவர்களாக இருந்தால், மாதுளையோ அல்லது மாதுளை ஜூஸை குடிப்பதற்கு எடுத்து கொள்வதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும்.

குறைந்த இரத்த அழுத்தம்:

மாதுளையில் பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, அவை இரத்த நாளங்களை தளர்த்தும். மாதுளை சாறு இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஆனால் ஏற்கனவே குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது தீங்கு விளைவிக்கும். மாதுளை இரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கும். இது தலைச்சுற்றல், பலவீனம் மற்றும் மயக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ALSO READ: நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய 5 பழங்கள் – காரணம் என்ன தெரியுமா?

அறுவை சிகிச்சைக்கு முன் மாதுளை எடுக்கக் கூடாது:

எந்த வகையான அறுவை சிகிச்சை மேற்கொள்பவராக இருந்தாலும், அறுவை சிகிச்சைக்கு குறைந்தது 2 வாரங்களுக்கு முன்பு மாதுளை சாப்பிடுவதை நிறுத்துங்கள். அது இரத்த உறைவு செய்யாது மற்றும் மயக்க மருந்தை பாதிக்கும் திறனை கொண்டுள்ளது. அதாவது, மாதுளை இரத்தத்தை மெலிதாக்கும் மருந்தாக செயல்படுகிறது, இது அறுவை சிகிச்சையின் போது இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் மீள்வதில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள்:

சிலருக்கு மாதுளை அல்லது அதன் ஜூஸ் ஒவ்வாமை பிரச்சனையை உண்டாக்கும். அதன்படி தோல் வெடிப்பு, அரிப்பு, சுவாசிப்பதில் சிரமம் அல்லது வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். ஏற்கனவே ஏதேனும் உணவு ஒவ்வாமை இருந்தால், மாதுளை சாறு குடிப்பதற்கு முன்பு நிச்சயமாக ஒரு மருத்துவரை அணுகவும்.

சர்க்கரை நோயாளிகள் கவனம்:

மாதுளை இயற்கையானது என்றாலும், இதில் இயற்கையாக சர்க்கரையை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு, இது சர்க்கரை அளவை அதிகரிக்கும். நீங்கள் இன்னும் அதை குடிக்க விரும்பினால், மருத்துவரை அணுகிய பின்னரே குறைந்த அளவே எடுத்துக்கொள்ளுங்கள்.

ALSO READ: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்திய மசாலாக்கள்.. தினம் தினம் ஆரோக்கியம் தரும்!

மருந்துகளின் விளைவை குறைக்கும்:

மாதுளை சில மருந்துகளுடன் வினைபுரியும். இது இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளின் விளைவைக் குறைக்கலாம். ACE தடுப்பான்கள், ஸ்டேடின்கள், பீட்டா-தடுப்பான்கள் அல்லது ஆன்டிகோகுலண்டுகளை எடுத்துக்கொள்பவர்கள் மாதுளை எடுத்துக்கொள்ள கூடாது. ஏனெனில் இது மருந்து உடலில் நீண்ட காலம் தங்க செய்யும். ஏதேனும் வழக்கமான மருந்தை எடுத்துக்கொண்டால், மாதுளை சாப்பிடுவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

Follow Us