AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Women’s Health: பெண்களே எச்சரிக்கை! ப்ரீயட்ஸ் தாமதப்படுத்த மாத்திரையா..? இந்த பக்கவிளைவுகள் ஏற்படலாம்..!

Period Delay Pills: மாதவிடாயை நிறுத்தும் அல்லது தாமதப்படுத்தும் மருந்துகளில் பொதுவாக புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோன் இருக்கும். இந்த ஹார்மோன் ஒரு பெண்ணின் உடலில் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது. ஒரு பெண் இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது, ​​அவை உடலின் இயற்கையான ஹார்மோன் சுழற்சியை உண்டாக்குகிறது.

Women’s Health: பெண்களே எச்சரிக்கை! ப்ரீயட்ஸ் தாமதப்படுத்த மாத்திரையா..? இந்த பக்கவிளைவுகள் ஏற்படலாம்..!
மாதவிடாய்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Nov 2025 16:28 PM IST

மாதவிடாய் (Menstruation) என்பது ஒவ்வொரு பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் ஏற்படும் ஒரு இயற்கையான செயல்முறையாகும். இது பெண்களின் சீரான உடலை பராமரிக்க அவசியமானதாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், மாதவிடாய் போன்ற காலங்களில் பெண்கள் சிலர் மத விழாக்கள், பிரார்த்தனைகள், பயணம் (Travel) அல்லது திருமணம் போன்ற நல்ல நாட்களில் தங்கள் மாதவிடாயை நிறுத்த மருந்துகள் மற்றும் மாத்திரைகளை எடுத்து கொள்கிறார்கள். இந்த மருந்துகள் தற்காலிக நிவாரணம் அளித்தாலும், அவை உடலின் ஹார்மோன் சமநிலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தநிலையில், மாதவிடாய் தாமதத்திற்கான மாத்திரைகள் எவ்வாறு செயல்படுகின்றன? அதை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்? இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுமா உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

மாதவிடாயை நிறுத்தும் மருந்துகள் எவ்வாறு செயல்படுகின்றன?

மாதவிடாயை நிறுத்தும் அல்லது தாமதப்படுத்தும் மருந்துகளில் பொதுவாக புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோன் இருக்கும். இந்த ஹார்மோன் ஒரு பெண்ணின் உடலில் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது. ஒரு பெண் இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது, ​​அவை உடலின் இயற்கையான ஹார்மோன் சுழற்சியை உண்டாக்குகிறது. இது தற்காலிகமாக அண்டவிடுப்பையும் மாதவிடாயையும் நிறுத்துகிறது. இந்த மருந்துகள் பொதுவாக எதிர்பார்க்கப்படும் மாதவிடாய்க்கு 3 முதல் 4 நாட்களுக்கு முன்பு பயன்படுத்தப்படுகின்றன.

ALSO READ: கருப்பை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்..!

இது பக்கவிளைவை ஏற்படுத்துமா..?

மாதவிடாய் தடுக்கும் மாத்திரைகளை ஒன்று அல்லது இரண்டு முறை எடுத்துக் கொண்டால் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தாது. ஆனால், மீண்டும் மீண்டும் அல்லது நீண்ட நேரம் பயன்படுத்துவது உடலில் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஹார்மோன் சமநிலையின்மை:

மாதவிடாயை தடுக்கும் மருந்துகள் உடலின் ஹார்மோன் சுழற்சியை சீர்குலைத்து, மனநிலை மாற்றங்கள், எரிச்சல் மற்றும் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும். ஹார்மோன் சமநிலையின்மை நீண்ட காலத்திற்கு மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருக்க காரணமாகிறது.

ஒழுங்கற்ற மாதவிடாய்:

மாதவிடாயை தடுக்கும் மருந்துகளின் தொடர்ச்சியான பயன்பாடு மாதவிடாய் சுழற்சியை சீர்குலைத்து, அடுத்தடுத்த மாதங்களில் தாமதமாக அல்லது அதிகப்படியான மாதவிடாய்க்கு வழிவகுக்கும்.

தலைவலி மற்றும் சோர்வு:

மாதவிடாயை தடுக்கும் மருந்துகளின் 3வது மற்றும் மிகவும் பொதுவான பக்க விளைவு தலைவலி, சோர்வு மற்றும் குமட்டல் ஆகியவை ஏற்படும். சில பெண்கள் லேசான காய்ச்சலையோ அல்லது உடலில் கனமான உணர்வையோ தரும்.

இரத்த உறைவு அபாயம்:

உலக சுகாதார அமைப்பு மற்றும் தேசிய சுகாதார சேவை (NHS UK) படி, ஹார்மோன் மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்துவது இரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கும், குறிப்பாக புகைபிடிக்கும் அல்லது பருமனான பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாக இருக்கும்.

ALSO READ: வயிற்றை அழுத்தி தூங்குவது நல்லதா..? உடலில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்?

கருவுறுதலில் தாக்கம்:

மாதவிடாயை தடுக்கும் மருந்துகளை அடிக்கடி பயன்படுத்துவது அண்டவிடுப்பைப் பாதித்து, கருத்தரிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

Follow Us