AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெண்களிடையே காணப்படும் ஹீமோகுளோபின் குறைபாடு – அறிகுறிகள் என்ன?

Women’s Health Alert : இந்தியாவில் 58 சதவிகிதம் பெண்கள் இரத்த சோகை குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. பெண்களுக்கு தங்கள் உடலின் மேல் உள்ள அக்கறையின்மையே இந்த பிரச்னைக்கு காரணமாக கூறப்படுகிறது.

பெண்களிடையே காணப்படும் ஹீமோகுளோபின் குறைபாடு – அறிகுறிகள் என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Aug 2025 22:38 PM IST

இந்தியப் பெண்களை எடுத்துக்கொண்டால்,  ஹீமோகுளோபின் பிரச்சினை இங்கு பொதுவானது. குறிப்பாக கிராமப்புறங்களில் இது அதிகப்படியாக காணப்படுகிறது. தேசிய மருத்துவ கணக்கெடுப்பின்படி, நாட்டில் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 60 சதவீத சிறுமிகளுக்கு இரத்த சோகை உள்ளது. இரத்த சோகையின் தொடக்கத்தில், ஒருவர் லேசான தலைச்சுற்றல், சோர்வு மற்றும் பலவீனத்தை உணர்கிறார். ஆனால் நீண்ட காலம் தொடர்ந்தால் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். இந்திய வாழ்க்கை சூழலில் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. இது பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்படு்வதற்கு முக்கிய காரணம்.

இந்தியாவில் குறிப்பாக கிராமப்புறங்களில் பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. பெரும்பாலும் நோய் பாதிப்புகள் தீவிரமடைந்த நிலையிலேயே அவர்கள் மருத்துவமனை செல்கிறார்கள். சரியான ஊட்டச்சத்துக்களை அவர்கள் உணவில் எடுத்துக்கொள்வதில்லை. இதனால் அவர்களுக்கு இரத்த சோகை பிரச்னை உருவாகிறது.

இதையும் படிக்க : கால்சியம் குறைபாட்டால் எலும்புகள் மட்டும் பாதிக்காது – இந்த பிரச்னைகளும் ஏற்படலாம்

இரத்த சோகை ஏற்படுவதற்கான காரணங்கள்

நமது உடலில் காணப்படும் செல்கள், சிவப்பு ரத்த அணுக்கள் என்று அழைக்கப்படுகின்றன, அவை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. உடலில் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தி குறையும் போது, உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது, மேலும் புதிய இரத்த உற்பத்தியும் குறையத் தொடங்குகிறது. இதனால் தான் இரத்த சோகை ஏற்படுகிறது.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறுமிகளில் சுமார் 53 சதவீதம் பேருக்கு இரத்த சோகை பிரச்னை இருப்பது தெரியவந்திருக்கிறது.   மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காரணமாக உடலில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு இரத்தம் வெளியிடப்படுகிறது. இந்த நேரத்தில், உணவில் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் குறைபாடு இருந்தால், இரத்த சோகை ஏற்படுகிறது. இந்த காரணத்திற்காக, ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது இந்த பிரச்னை ஏற்பட்டால், இது தாய் மற்றும் குழந்தை இருவரையும் பாதிக்கிறது.

இதையும் படிக்க : ஒற்றைத் தலைவலி மீண்டும் மீண்டும் ஏற்படுகிறதா? தடுப்பது எப்படி?

இரத்த சோகையை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?

  • இரும்புச்சத்து கொண்ட உணவு சாப்பிடுவதை அதிகரிக்கவும். இரத்த சோகைக்கு முக்கிய காரணம் இரும்புச்சத்து குறைபாடு. இதை அதிகரிக்க, 18 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு தினமும் 19 மில்லிகிராம் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இதற்காக, கீரை, பீட்ரூட், டோஃபு, ஆப்பிள், மாதுளை, பாதாம், பேரீச்சம்பழம், திராட்சை, நெல்லிக்காய், முட்டை மற்றும் வெல்லம் சாப்பிடுங்கள். இவை அனைத்தும் இரும்பு சத்தின் நல்ல ஆதாரங்கள்.
  • வைட்டமின் ஏ மற்றும் சி எடுத்துக் கொள்ளுங்கள். இரும்புச்சத்துடன், உடலுக்கு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி தேவை. அவற்றின் குறைபாட்டைப் பூர்த்தி செய்ய, ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி, ஸ்ட்ராபெரி, கேப்சிகம், மால்டா போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் கலவையானது உடலில் இரும்புச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.
  •  இந்த குறைபாட்டை சமாளிக்க, கீரைகள், வாழைப்பழம், வேர்க்கடலை, ப்ரோக்கோலி, கோழி மற்றும் முளைகட்டிய தானியங்களை சாப்பிடுங்கள்.
  •  ஒரு நாளைக்கு குறைந்தது 15 முதல் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதை தினமும் பழக்கமாக்குங்கள். இது உடலில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது, இது இரத்தத்தை அதிகரிக்கிறது.

Follow Us