ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதியின் ஏஸ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Actor Vijay Sethupathis ACE Movie: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஏஸ். இந்தப் படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் தற்போது ஓடிடியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதியின் ஏஸ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

ஏஸ்

Published: 

14 Jun 2025 12:42 PM

நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi) நடிப்பில் சத்தமே இல்லாமல் திரையரங்குகளில் வெளியாகி தற்போது ஓடிடியில் காணக் கிடைக்கும் படம் ஏஸ். ஆம் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானபோது பெரிய அளவில் புரமோஷன் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இது குறித்து விஜய் சேதுபதியும் ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பார். ஒரு வேலை புரமோஷன் பணிகளை படக்குழு செய்து இருந்தால் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கவும் வாய்ப்பு உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மே மாதம் 23-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஏஸ். ஆறுமுககுமார் (Director Arumuga kumar) இந்தப் படத்தை எழுதி இயக்கி தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் கதை என்ன?

துபாயில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த விஜய் சேதுபதி தனது பழைய வாழ்க்கையை மறந்து புதிதாக சாதாரண மனிதர்களைப் போல வாழ வேண்டும் என்று மலேசியாவிற்கு செல்கிறார். அங்கு யோகி பாபு தனது உறவினரின் நண்பரை பிக்கப் செய்தவர்காக காத்திருக்கிறார். ஆனால் அவர் கூப்பிட வந்தது விஜய் சேதுபதிதான் என்று தவறுதலாக அழைத்துச் செல்கிறார். புதிய வாழ்க்கை வாழ நினைக்கும் விஜய் சேதுபதியும் தான் தான் அந்த நபர் என்பதுபோல யோகிபாபு உடனே சென்று விடுகிறார்.

அதனைத் தொடர்ந்து யோகி பாபு உடன் தங்கி ஒரு ஹோட்டலில் வேலை செய்து வரும் விஜய் சேதுபதி நாயகி ருக்மினியை சந்திக்கிறார். அவர் மீது காதல் வயப்படுகிறார். முதலில் விஜய் சேதுபதி மீது தவறான எண்ணம் உடைய ருக்மினிக்கு பிறகு விஜய் சேதுபதி மீது காதல் ஏற்படுகிறது.

இந்த நிலையில் ருக்மிணியின் ஸ்டெப் ஃபாதராக இருக்கும் பப்லு ப்ரித்விராஜ் தன்னை கொடுமை படுத்துவதையும் அவரால் ஏற்பட்ட துன்பங்கள் குறித்தும் தனது காதலன் விஜய் சேதுபதியிடம் ருக்மினி கூறுகிறார். முன்னதாக ருக்மினிக்காக பணம் கடன் வாங்க சென்ற இடத்தில் யோகி பாபு மற்றும் விஜய் சேதுபதி ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள்.

இப்படி தனது காதலியை சுற்றியுள்ள சிக்கல்கள் அனைத்தையும் சரி செய்து தனது காதலியுடன் வாழ விஜய் சேதுபதி ஒரு திட்டம் தீட்டுகிறார். இந்த எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் பணம் தான். பணம் இருந்தால் எல்லாத்துக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்ற நோக்கில் மலேசியாவில் உள்ள வங்கியில் பணத்தை கொள்ளை அடிக்கிறார்.

இந்த குற்றத்தில் இருந்து விஜய் சேதுபதி தப்பித்தாரா இல்லையா? தனது காதலியுடன் நினைத்த வாழ்க்கையை வாழ்ந்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ஏஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: