நடிகர் நானியின் தி பாரடைஸ் படத்தின் ஷூட்டிங் தாமதமாகிறதா? வைரலாகும் தகவல்

The Paradise Movie: நடிகர் நானியின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தி பாரடைஸ். மிகவும் வித்யாசமான கதாப்பாத்திரத்தில் நடிகர் நானியின் அறிமுக வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் நானியின் தி பாரடைஸ் படத்தின் ஷூட்டிங் தாமதமாகிறதா? வைரலாகும் தகவல்

தி பாரடைஸ்

Published: 

16 Jun 2025 16:59 PM

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி (Actor Nani). இவரை நேச்சுரல் ஸ்டார் என்று தெலுங்கு சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய ரசிகரகள் அனைவரும் அன்புடன் அழைப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் நானியின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் தி பாரடைஸ் படம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா (Director Srikanth Odela) இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் படம் தி பாரடைஸ். நடிகர் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகை சோனாலி குல்கர்னி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான போதே ரசிகர்களிடையே கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நானியின் நடிப்பில் உருவாகும் தி பாரடைஸ்:

இந்த நிலையில் படம் வருகின்ற மார்ச் மாதம் 26-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு முன்னதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. ஆனால் தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் தாமதம் ஆகி வருவதால் படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.

நடிகர் நானியின் நடிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்து வரும்  நிலையில் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருகூரி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி பாரடைஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

நடிகர் நானியின் நடிப்பில் இறுதியாக ஹிட் அடித்த ஹிட் 3 படம்:

நடிகர் நானி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஹிட் 3. கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன நீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.