“மக்களைச் சந்தியுங்கள்.. சிறு கூட்டங்களை நடத்துங்கள்”.. தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி சொன்ன தேர்தல் ‘மந்திரம்’!

Tamilnadu Assembly Election: வழக்கம்போலத் தனது பேச்சில் தமிழகத்தின் தொன்மை மற்றும் திருக்குறள் குறித்துப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட பிரதமர், தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளை மக்களிடம் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

மக்களைச் சந்தியுங்கள்.. சிறு கூட்டங்களை நடத்துங்கள்.. தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு  பிரதமர் மோடி சொன்ன தேர்தல் மந்திரம்!

பிரதமர் மோடி

Updated On: 

14 Apr 2026 07:33 AM

 IST

Tamilnadu Polls 2026: தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாகத் கலந்துரையாடினார். “எனது பூத், வலிமையான பூத்” (Mera Booth Sabse Mazboot) என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தேர்தல் வெற்றிக்குத் தேவையான முக்கிய ஆலோசனைகளை அவர் வழங்கினார்.  குறிப்பாக, பிரதமர் மோடி வரும் ஏப்​ரல் 15-ம் தேதி நாகர்​கோ​விலிலும், ஏப்​ரல் 18-ம் தேதி கோவை​யிலும் நடை​பெற உள்ள பிரம்​மாண்ட பொதுக்​கூட்​டங்​களில் பங்​கேற்று உரை​யாற்​றுகிறார். இந்​தப் பயணத்​தின் முன்​னோட்​ட​மாகவே, நேற்று மாலை 4 மணி​யள​வில் தமிழக பாஜக பூத் கமிட்டி நிர்​வாகி​களு​டன் பிரதமர் மோடி காணொலி வாயி​லாக விரி​வான ஆலோ​சனை நடத்​தி​னார்.

இதையும் படிக்க : தமிழகம் வர மறுக்கும் ராகுல் காந்தி… பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு? இண்டி கூட்டணியில் வெடிக்கும் யுத்தம்!

தெருமுனைக் கூட்டங்களுக்கு முக்கியத்துவம்:

பிரதமர் மோடி தனது உரையில், பெரிய பொதுக்கூட்டங்களை விடவும், சிறிய அளவிலான தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் வீட்டுச் சந்திப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். “பெரிய மேடைகளில் பேசுவதை விட, 10 அல்லது 20 பேரைச் சந்தித்துச் சிறிய அளவில் கலந்துரையாடுவது மக்களிடையே அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும்” என்று அவர் குறிப்பிட்டார். பூத் வாரியாக அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மத்திய அரசின் சாதனைகளைப் பரப்புங்கள்:

தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்துப் பொதுமக்களிடம் விரிவாக விளக்க வேண்டும் எனப் பிரதமர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, கிசான் சம்மான் நிதி, ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு மற்றும் இலவச எரிவாயு இணைப்பு பெற்ற பயனாளிகளை நேரில் சந்தித்து, அத்திட்டங்களின் பலன்களை நினைவூட்ட வேண்டும். எதிர்க்கட்சிகள் பரப்பும் தவறான தகவல்களை முறியடிக்க, உண்மையான தரவுகளுடன் மக்களைச் சந்திக்க வேண்டும் எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

பூத் அளவிலான வியூகம்:

தேர்தலில் வெற்றி பெற ‘பூத்’தான் அடிப்படை அலகு என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது 370 வாக்குகள் கூடுதலாகப் பெற இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு பூத்திலும் உள்ள வாக்காளர் பட்டியலைச் சரியாக ஆய்வு செய்து, புதிய வாக்காளர்களைக் கண்டறிந்து அவர்களைக் கட்சியுடன் இணைக்க வேண்டும். இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் என அனைவரையும் கவரும் வகையில் பிரசார முறைகளை மாற்றியமைக்க வேண்டும்.

தமிழக கலாச்சாரம் மற்றும் மொழி மீது மதிப்பளிப்பு:

வழக்கம்போலத் தனது பேச்சில் தமிழகத்தின் தொன்மை மற்றும் திருக்குறள் குறித்துப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட பிரதமர், தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளை மக்களிடம் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க: அமைச்சர் சேகர் பாபு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை – பரபரப்பு தகவல்

தொண்டர்களுடன் கலந்துரையாடல்:

இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கேட்கும் கேள்விகளுக்குப் பிரதமர் மோடி பதிலளித்தார். தொண்டர்களின் கடின உழைப்பைப் பாராட்டிய அவர், “தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி வியக்கத்தக்க வகையில் உள்ளது, இது வருங்காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?