Magalir Urimai Thogai : புதிய பயனர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை எப்போது கிடைக்கும்?.. முக்கிய தகவல்!
Kalaignar Magalir Urimai Thogai Scheme | தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் புதியதாக இணைக்கப்படும் பயனர்களுக்கு எப்போது பணம் வழங்கப்படும் என்று எதிர்ப்பார்பு எழுந்துள்ளது. தற்போது அது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai Scheme) 2023 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் பயன் பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள தகுதி உள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், புதிய பயனர்களை இணைப்பதற்காக முகாம்கள் அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புதியதாக விண்ணப்பிக்கும் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை எப்போது கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று திமுக (DMK – Dravida Munnetra Kazhagam) அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இதுவரை ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் மொத்தம் உள்ள ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை 2 கோடி 16 லட்சம் ஆக உள்ளது.
எனவே மீதமுள்ள பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் வகையில், முகாம்கள் அமைக்கப்பட்டு புதிய பயனர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்ததன் படி புதிய பயனர்களை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதிய பயனர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சட்டப்பேரவையில் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விடுபட்டவர்களுக்கு விரைவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, ஜூன் முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
சட்டப்பேரவையில், கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்#TNAssembly pic.twitter.com/KOf34SAW8d
— DMK (@arivalayam) April 25, 2025
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை எப்போது கிடைக்கும்?
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எப்போது முதல் பணம் வழங்கப்படும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, முதன் முதலில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், செப்டர் 15, 2025 அல்லது திமுக தொடக்க விழவான செப்டம்பர் 17, 2025 ஆகிய இரண்டு தேதிகளில் ஏதேனும் ஒரு தேதிகளில் வழங்கப்படலாம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.