Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ATM : இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்.. காரணம் என்ன?

60 Percentage of People Using Cash in India | அனைத்து ஏடிஎம்களிலும் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுக்களை அதிகப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்தியாவில் 60 சதவீதம் மக்கள் கையில் பணத்தை வைத்து தான் செலவு செய்வதாக சிஎம்எஸ் இன்ஃபோ சிஸ்டம் தெரிவித்துள்ளது.

ATM : இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்.. காரணம் என்ன?
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 19 Jun 2025 11:12 AM

இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) 1 , 2 , 5 , 10 , 20 நாணயங்கள் மற்றும் 50 , 100 , 200, 500, 2,000 ரூபாய் நோட்டுக்களை புழகத்தில் வைத்திருந்தது. இந்த நிலையில், ரூ.2,000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. அதன்படி, புழக்கத்தில் இருந்த நோட்டுக்களை திரும்ப பெற்று வருகிறது. இந்த நிலையில், ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மையங்களில் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுக்களை அதிகப்படுத்த வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக விரைவில் 500 ரூபாய் நோட்டுக்களை ஆர்பிஐ ரத்து செய்ய போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வகையில் குறைந்த மதிப்பீடுகளை கொண்ட நோட்டுக்களை புழக்கத்தில் வைப்பதே ஆர்பிஐ-ன் முக்கிய நோக்கமாக இருந்தது.

ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுக்களை அதிகப்படுத்த கூறிய ஆர்பிஐ

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வங்கிகளுக்கு சுற்றரிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், ஏடிஎம் மையங்களில் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுக்களை அதிகப்படுத்த வேண்டும் என கூறியிருந்தது. அதாவது, செப்டம்பர் 30, 2025-க்குள் ஏடிஎம்களில் 75 சதவீதம் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுக்களை வைக்க வேண்டும் என்றும், மார்ச் 31, 2026-க்குள் ஏடிஎம்களில் 90 சதவீதம் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுக்களை அதிகப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது.

வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்த ஆர்பிஐ

ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுக்கள் குறித்து ஆர்பிஐ வெளியிட்ட இந்த தகவலை சிஎம்எஸ் இன்ஃபோ சிஸ்டம் பகிர்ந்துக்கொண்டுள்ளது. ஏடிஎம்களின் பணத்தை வழங்கும் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இது உள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள மொத்த 2.15 லட்சம் ஏடிஎம்களில் இந்த நிறுவனத்திற்கு மட்டும் 73,000 எடிஎம்கள் உள்ளன.

ஆர்பிஐ-ன் உத்தரவை பகிர்ந்த சிஎம்எஸ் இன்ஃபோ சிஸ்டம்

இந்த நிலையில், 60 சதவீதம் இந்திய மக்கள் பணத்தை ரொக்கமாகவே செலவிட விரும்புகின்றனர் என்று சிஎம்எஸ் இன்ஃபோ சிஸ்டம் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், ஏடிஎம்களில் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுக்களை அதிகம் வைத்திருப்பது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.