“சட்டவிரோதம்” சிந்து நிதி ஒப்பந்தம்.. இந்தியாவை கடுமையாக சாடிய பாகிஸ்தான் பிரதமர்!
Pakistan On Indus Waters Treaty : சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து இந்தியாவை பாகிஸ்தான் கடுமையாக சாடியுள்ளது. சிந்து நிதி நீரை நம்பி தான் ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இருக்கும் நிலையில், அதனை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்ததை நடத்த பாகிஸ்தான் அழைப்பு விடுத்தும், இந்தியா அதற்கு மறுத்து வருகிறது.

சிந்து நிதி நீர் ஒப்பந்தம் (Indus Water treaty) குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் (pakistan pm Shehbaz Sharif) ஷெரீப் இந்தியாவை கடுமையாக சாடியுள்ளார். குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக மில்லியன் கணக்கான உயிர்களை பணயக்கைதிகளாக வைத்திருக்கக்கூடாது என பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் காட்டமாக விமர்சித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றங்கள் தணிந்தாலும், பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தையும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இதனால், பாகிஸ்தான் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. அதாவது, பாகிஸ்தானின் முக்கிய நீர் ஆதாரமாக சிந்து நதி நீர் உள்ளது. இதனால், பாகிஸ்தானில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
சிந்து நிதி ஒப்பந்தம்
சிந்து நதி நீரை நம்பி தான் பாகிஸ்தானில் 90 சதவீதம் மக்கள் உள்ளனர். இதனால், சிந்து நதி நீரை விடுவிக்க வேண்டும் என இந்தியாவிடம் பாகிஸ்தான் தொடர் முறையிட்டு வருகிறது. ஆனால், இதற்கு இந்தியாவும் சிந்து நிதி நீர் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தொடர்ந்து மறுத்து வருகிறது.




இதனால், பாகிஸ்தான் கடும் வறட்சியை எதிர்கொண்டு வருகிறது. அண்மையில் கூட, சிந்து நிதி நீர் ஒப்பந்தம், வர்த்தகம் குறித்து இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியிருந்தார். ஆனால், அதற்கு இந்திய மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நிலைபாடு
Watch: MEA Spokesperson Randhir Jaiswal says, “We have been very clear and consistent in our position. I said this in the previous press conference last week, as well as in the press engagement we had on 13th May. Our position regarding Pakistan, and engagement with Pakistan, has… pic.twitter.com/yrcDVtAip6
— IANS (@ians_india) May 29, 2025
பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை என்றால் காஷ்மீர் பிரச்சை மற்றும் பயங்கரவாதம் மட்டும் தான் என இந்தியா திட்டவட்டமாக கூறி வருகிறது. இதனை பிரதமர் மோடியும் பலமுறை கூறியிருக்கிறார். தஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பேயில் நடந்த சர்வதேச மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கலந்து கொண்டார்.
இந்தியாவை கடுமையாக சாடிய பாகிஸ்தான்
அங்கு, சிந்து நிதிநீர் ஒப்பந்தம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், “சிந்து நிதி நீரை இந்தியா நிறுத்தி வைத்தது ஒருதலைப்பட்சமான மற்றும் சட்டவிரோதமானது. இந்தியாவின் முடிவு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக மில்லியன் கணக்கான உயிர்களை பணயக்கைதிகளாக வைத்திருக்கக்கூடாது.
பாகிஸ்தான் இதை அனுமதிக்காது. சிவப்பு கோட்டை கடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஐ.நா. உறுப்பு நாடுகள் மற்றும் 70 சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 2,500 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் இதுபோன்று கூறியுள்ளார்.