AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெஞ்சு சளியும் மூக்கடைப்பும் ஓடிடும்! வீட்டு வைத்தியத்தில் ஆஸ்துமாவுக்கு ‘குட்பை’!

Tips to Control Asthma Easily: ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் தொடக்கத்திலேயே உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதோடு, பூலாங்கிழங்கு, துளசி, கீழாநெல்லி உள்ளிட்ட பத்து மூலிகைகளின் கலவையை உட்கொள்வதன் மூலம் இந்நோயிலிருந்து விரைவாகக் குணமடைய முடியும். பூரண சந்திரோதயச் செந்தூரத்தைத் தேனிலும் வாசாதி லேகியத்தை நெல்லிக்காய் அளவிலும் உணவுக்குப் பின் உட்கொள்வதும் ஆஸ்துமாவை முழுமையாகக் குணப்படுத்த வழிவகுக்கும்.

Sivasankari Bose
Sivasankari Bose | Published: 16 Jul 2026 13:32 PM IST
பொதுவாக ஒருவருக்கு ஆஸ்துமா நோய் வந்துவிட்டால் அவர்கள் சுவாசிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் இந்த நோய் இருப்பதை அறிந்த உடனே முறையான உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும் இந்த ஆஸ்துமா நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அதனை முழுமையாகக் குணப்படுத்தி முறையான சிகிச்சை அளிப்பதற்கு நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தில் மிகச் சிறந்த மற்றும் வீரியமிக்க பல இயற்கை மருந்துகள் உள்ளன.

பொதுவாக ஒருவருக்கு ஆஸ்துமா நோய் வந்துவிட்டால் அவர்கள் சுவாசிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் இந்த நோய் இருப்பதை அறிந்த உடனே முறையான உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும் இந்த ஆஸ்துமா நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அதனை முழுமையாகக் குணப்படுத்தி முறையான சிகிச்சை அளிப்பதற்கு நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தில் மிகச் சிறந்த மற்றும் வீரியமிக்க பல இயற்கை மருந்துகள் உள்ளன.

1 / 5
பூலாங்கிழங்கு, புஷ்கரமூலம், புளிவஞ்சி, ஏலரிசி, பெருங்காயம், அகில், துளசி, கீழாநெல்லி, கீரைப்பாலை மற்றும் காட்டுக் கோரைக்கிழங்கு ஆகிய பத்து வகையான மூலிகைகளையும் ஒன்றாகக் கலந்து நாம் தினமும் உட்கொண்டு வர வேண்டும். இந்த பத்து மூலிகைகளின் கூட்டுச் கலவையானது ஆஸ்துமா நோயால் உடலுக்குள் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து, இந்த நோயை மிகவும் விரைவாகவும் எளிதாகவும் குணப்படுத்த பெரிதும் உதவுகிறது.

பூலாங்கிழங்கு, புஷ்கரமூலம், புளிவஞ்சி, ஏலரிசி, பெருங்காயம், அகில், துளசி, கீழாநெல்லி, கீரைப்பாலை மற்றும் காட்டுக் கோரைக்கிழங்கு ஆகிய பத்து வகையான மூலிகைகளையும் ஒன்றாகக் கலந்து நாம் தினமும் உட்கொண்டு வர வேண்டும். இந்த பத்து மூலிகைகளின் கூட்டுச் கலவையானது ஆஸ்துமா நோயால் உடலுக்குள் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து, இந்த நோயை மிகவும் விரைவாகவும் எளிதாகவும் குணப்படுத்த பெரிதும் உதவுகிறது.

2 / 5
முசுமுசுக்கை மற்றும் கரிசலாங்கண்ணி ஆகிய மூலிகைகளின் இலைகளுடன் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து அதனை வடிகட்டி நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தயார் செய்யப்படும் மூலிகை டீயை தினமும் காலையிலும் மாலையிலும் தவறாமல் குடித்து வர வேண்டும், இது மூச்சுக்குழலை விரிவடையச் செய்து மூக்கடைப்பைத் தவிர்க்கவும் நெஞ்சில் உள்ள சளியை எளிதாக வெளியேற்றவும் உதவுகிறது.

முசுமுசுக்கை மற்றும் கரிசலாங்கண்ணி ஆகிய மூலிகைகளின் இலைகளுடன் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து அதனை வடிகட்டி நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தயார் செய்யப்படும் மூலிகை டீயை தினமும் காலையிலும் மாலையிலும் தவறாமல் குடித்து வர வேண்டும், இது மூச்சுக்குழலை விரிவடையச் செய்து மூக்கடைப்பைத் தவிர்க்கவும் நெஞ்சில் உள்ள சளியை எளிதாக வெளியேற்றவும் உதவுகிறது.

3 / 5
மிளகு கல்பம் என்ற இயற்கை மருத்துவப் பொருளைக் கொண்டு ஆஸ்துமாவைக் குணப்படுத்த காலை மற்றும் இரவு ஆகிய இரு வேளைகளிலும் நாம் உணவு சாப்பிடுவதற்கு முன்பாக அரை கிராம் மிளகு கல்பத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அரை கிராம் மிளகு கல்பத்தை அரை டீஸ்பூன் அளவு சுத்தமான தேனுடன் நன்றாகக் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும், இது ஆஸ்துமாவினால் ஏற்படும் மூச்சுத் திணறல் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது.

மிளகு கல்பம் என்ற இயற்கை மருத்துவப் பொருளைக் கொண்டு ஆஸ்துமாவைக் குணப்படுத்த காலை மற்றும் இரவு ஆகிய இரு வேளைகளிலும் நாம் உணவு சாப்பிடுவதற்கு முன்பாக அரை கிராம் மிளகு கல்பத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அரை கிராம் மிளகு கல்பத்தை அரை டீஸ்பூன் அளவு சுத்தமான தேனுடன் நன்றாகக் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும், இது ஆஸ்துமாவினால் ஏற்படும் மூச்சுத் திணறல் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது.

4 / 5
பூரண சந்திரோதயச் செந்தூரம் என்ற மருந்துத் தூளையும் வாசாதி லேகியத்தையும் காலை மற்றும் இரவு என இரு வேளைகளிலும் நாம் உணவு சாப்பிட்ட பிறகு உட்கொள்வது ஆஸ்துமாவை விரைவில் குணமாக்க உதவும். இதில் பூரண சந்திரோதயச் செந்தூரத்தை ஒரு குறிப்பிட்ட அளவு எடுத்துத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும், அதே நேரத்தில் வாசாதி லேகியத்தை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்துத் தனியாகச் சாப்பிட்டு வர வேண்டும்.

Gallery Tv9 (35)

5 / 5
Follow Us