ஏஐ பயிற்சிக்காக நாம் அப்லோட் செய்யாத படங்களையும் பயன்படுத்தும் ஃபேஸ்புக்? அதிர்ச்சி தகவல்

Facebook Photo Privacy : பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் உங்கள் கேலரியில் உள்ள படங்களை ஏஐக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.மேலும் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பெறப்பட்ட பயனர்களின் அனைத்து தரவுகளும் பயன்படுத்தவுள்ளதாக மெட்டா தெரிவித்திருக்கிறது. இது பயனர்களின் பிரைவசி மீறல் என சலசலப்பு எழுந்துள்ளது.

ஏஐ பயிற்சிக்காக நாம் அப்லோட் செய்யாத படங்களையும் பயன்படுத்தும் ஃபேஸ்புக்? அதிர்ச்சி தகவல்

மாதிரி புகைப்படம்

Published: 

29 Jun 2025 17:00 PM

தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) வேகமாக வளர்ந்து வரும் இந்த காலத்தில், உலகின் முன்னணி சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் (Facebook), அதன் புதிய ஏஐ வசதிக்காக பயனர்களிடமிருந்து புகைப்படங்களை பெற்று பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. தற்போது, பயனர்கள் தங்களின் ஸ்மார்டபோன் கேமரா ரோல் (Camera Roll) புகைப்படங்களை பயனர்களின் அனுமதியுடன் கிளவுட் பிராசசிங்கில் (Cloud Processing) அப்லோட் செய்வதாக கூறப்படுகிறது.  குறிப்பாக பயனர்கள் ஃபேஸ்புக்கில் புதிய ஸ்டோரி ஒன்றை உருவாக்க முயற்சிக்கும் போது, உங்களிடம் Cloud Processing எனப்படும் வசதிக்கு உங்களுடைய ஒப்புதலை கேட்கிறது . நீங்கள் Allow என்பதை கிளிக் செய்யும்போது, உங்கள் கேலரியில் உள்ள புகைப்படங்கள், மெட்டாவின் சேவைக்கு பயன்படுத்தும்.

இந்த அம்சத்தின் மூலம், உங்கள் கேலரியில் இருக்கும் புகைப்படங்களை மெட்டா கலர்ஃபுல் கொலாஜ்கள், ரீகேப் (recap), ரீ ஸ்டைல் செய்யப்பட்ட படங்கள், மற்றும் வித்தியாசமான தீம்களில் போட்டோக்களை தானாக உருவாக்கும்.

நீங்கள் ஒப்புக்கொண்டால் என்ன நடக்கும்?

மெட்டா ஏஐ வசதிகளை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கும்போது, கீழ்க்கண்ட பணிகளுக்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள்.

  • உங்கள் புகைப்படங்கள் மற்றும் முக அமைப்புகளை ஏஐ ஆய்வு செய்ய அனுமதிக்கிறீர்கள்.
  • உங்கள் புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு, புதிய படங்களை உருவாக்க மெட்டாவிற்கு அனுமதி அளிக்கிறீர்கள்.
  • உங்கள் புகைப்படங்களில் உள்ள தேதி, இடம் மற்றும் பொருட்களைப் பார்த்து, அதனடிப்படையில் மாற்றங்கள் செய்ய அனுமதி அளிக்கிறீர்கள்.

பயனர்கள் ஒப்புதல் வழங்கும் புகைப்படங்களை மெட்டா, அதன் ஏஐ மூலம் ஆராய்ந்து, அதில் உள்ள முக அமைப்புகள், போட்டோவின் பின்னணி உள்ளவற்றை ஆய்வு செய்யும். இதன் மூலம் புதிய தெளிவான போட்டோக்களை உருவாக்கவும்,தொழில்நுட்ப அடிப்படையிலான பட பரிந்துரைகளை வழங்கவும் உதவும்.

தனிப்பட்ட தகவல்களை மெட்டா எப்படி பயன்படுத்துகிறது?

மெட்டா நிறுவனத்தின் ஏஐ விதிமுறைகளின்படி, பயனர்களின் கேள்விகள், கருத்துகள், மற்றும் கண்டென்ட் ஆகியவை அனைத்தும் தனிப்பட்ட தகவல்களாக கருதப்படுகின்றன. இவை அனைத்தையும் மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு செயலிகள் பயனர்களுக்கு என தனிப்பட்ட டேட்டாவை உருவாக்க முயற்சிக்கின்றன. இதன் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் ஏஐ அவர்களை புரிந்துகொண்டு தெளிவான தகவல்களை வழங்க பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.  ஆனால், தனிப்பட்ட தகவல்  வரம்பு குறித்து மெட்டா விளக்கம் அளிக்கவில்லை என்பது  கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

மெட்டா நிறுவனம் தற்போது மட்டுமல்ல, கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பயனர்கள் பதிவிட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் அப்டேட்டுகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அதன் ஜெனரேட்டிவ் ஏஐ மாடல்களைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பயனர்களுக்கு தெரிவிக்காமல் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதுதான் இதில் உள்ள கவலைக்குரிய விஷயம்.

உங்கள் புகைப்படங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா?

மெட்டாவின் இந்த புதிய ஏஐ அம்சம் தொழில்நுட்ப முன்னேற்றமாக பார்க்கப்பட்டாலும், பயனர்களின் பிரைவசி மற்றும் டேட்டா பாதுகாப்பு ஆகியவை குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் புகைப்படங்களை பயன்படுத்தாது என்றாலும் நீங்கள் அனுமதி அளிப்பதால் உங்கள் கேலரியை மெட்டா பயன்படுத்தும் என்பது இதில் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உங்கள் டேட்டா, முக அமைப்புகள், போட்டோக்கள் ஆகியவை ஒரு நிறுவனத்தின் கிளவுட் சேமிப்பில் பயன்படுத்தப்படும் ஆபத்தை நமக்கு உணர்த்துகிறது.