இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது, அடிப்படையில் பாகுபாடை கொண்டது – விசிக தலைவர் திருமாவளவன்..
Thirumavalavan: இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் தான் இந்து மதம் என்ற ஒன்று கொண்டுவரப்பட்டது. அடிப்படையில் பாகுபாடை கொண்டது இந்து மதம், பிற மதத்தில் சகோதரத்துவம் உள்ளது என விசிக விருதுகள் வழங்கும் விழாவில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேசியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி (Viduthalai Siruthaigal Katchi) தலைவர் திருமாவளவன் (Thirumavalavan) இந்து மதம் என்ற ஒன்றே இல்லை என 24 ஜூன் 2025 அன்று நடந்த நிகழ்ச்சியில் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு பிறகு தான் இந்து மதம் என்ற ஒன்று உருவானது. இந்து மதம் அடிப்படையிலேயே பாகுபாடை கொண்டது. பிற மதத்தில் சகோதரத்துவம் உள்ளது. ஆனால் இந்து மதம் அப்படி இல்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் அணு ஆயுதங்களால் கூட தகர்க்க முடியாதது இந்தியாவில் இருக்கக்கூடிய சாதிய கட்டமைப்பு என குறிப்பிட்டு பேசியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவிற்கு நன்றி:
இந்நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். ஆண்டுதோறும் நடைபெறும் விசிக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, மார்க்ஸ் மாமணி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேசிய அவர், “ தமிழ்நாடு அரசியலில் நாம் கூர்மைப்படுத்துகிறோம். மதசார்பின்மைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் – பாஜக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மதசார்பின்மை கூர்மை அடைகிறது. அதற்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸிற்கு நன்றி. மத்தியில் இருக்கும் அரசு என்பதால் பாஜகவை எதிர்க்கவில்லை, அவர்களின் அரசியலை தான் எதிர்க்கிறோம்
நாட்டில் அமையும் அரசு மதசார்பின்மையாக அமைய வேண்டும். ஆனால் பாஜக அரசு அப்படி இல்லை. நாம் கொடி ஏற்றி, பேனர் கட்டி, பொதுக்கூட்டங்கள் நடத்த போராட வேண்டியதாக இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இயக்கம் என்பது நாடாளுமன்ற, சட்டமன்ற சீட்டை பேரம் பேசும் கட்சி அல்ல. தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனக் கூட நான் அறிவிக்க முடியும். நாற்காலியில் எனக்கு நம்பிக்கை இல்லை பிளாஸ்டிக் சேர், தரையில் கூட நான் அமருவேன்.
இந்து மதம் என்ற ஒன்று கிடையாது – திருமாவளவன்:
விசிக விருதுகள் வழங்கும் விழா 2025
~~~~~~~~
விசிக விருதுகள் வழங்கும் விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.அம்பேத்கர் சுடர் –
முனைவர் திரு.கே.எஸ்.சலம்
மேனாள் துணைவேந்தர், திராவிடப் பல்கலைக் கழகம், ஆந்திராபெரியார் ஒளி –
திரு.சத்யராஜ்
திரைப்படக் கலைஞர்மார்க்ஸ்… pic.twitter.com/QRV9JUoCbC
— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 24, 2025
இந்து மதம் என்ற ஒன்று கிடையாது. ஆங்கிலேயர் காலத்திற்கு பின் இந்து மதம் கொண்டுவரப்பட்டது. இந்து மதத்தில் அடிப்படையாகவே சாதிய பாகுபாடு உள்ளது. பிற மதங்களில் சகோதரத்துவம் உள்ளது. ஆனால் இந்து மதத்தில் அப்படி இல்லை. அணு ஆயுதங்களால் கூட தகர்க்க முடியாதது இந்தியாவில் இருக்கக்கூடிய சாதிய கட்டமைப்பு தான்.
நான் திருநீரை அழித்தது பற்றி பேசுபவர்கள் என்னை மேல் பாதி கோயிலுக்கு அழைத்து செல்ல முடியுமா, என்னை சங்கராச்சாரியாராக மாற்ற வேண்டாம், என்னை சகோதரராக ஏற்றுக் கொள்ளுங்கள் ” என பேசியுள்ளார்