பொதுமக்கள் கவணத்திற்கு.. திருச்சி – காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம்!

Trichy-Karaikal Train Service Changes | திருச்சி - காரைக்கால் இடையே ரயில் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இன்று (ஜூன் 23, 2025) மற்றும் 2025, ஜூன் 25, 26, 27, 28, 29 தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கோட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

பொதுமக்கள் கவணத்திற்கு.. திருச்சி - காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம்!

மாதிரி புகைப்படம்

Published: 

23 Jun 2025 08:29 AM

 IST

திருச்சி, ஜுன் 23 : திருச்சி – காரைக்கால் (Trichy – Karaikal) இடையே டெமு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கோட்ட நிர்வாகம் (Divisional Railway Administration) தலவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், திருச்சி – காரைக்கால் இடையே என்ன என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, எந்த எந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுமக்களுக்கு பிரதான போக்குவரத்து சேவையாக இருக்கும் ரயில்கள்

இந்தியாவை பொறுத்த வரை பெரும்பாலான பொதுமக்கள் ரயில் போக்குவரத்து சேவையை நம்பி உள்ளனர். குறைவான கட்டணத்தில் விரைவாக பயணம் செய்ய முடியும் என்பதால் பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் ரயில் சேவையை அதிகம் பயன்படுத்துகின்றனர். சிலர் பணிக்கு செல்ல ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பயணிக்க ரயில் போக்குவரத்தை பெரிதும் நம்பியுள்ளனர். இந்த நிலையில் திருச்சி – காரைக்கால் இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்சி – காரைக்கால் இடையே ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே பொறியியல் படி நடைபெறுவதால் திருச்சி – காரைக்கால் டெமோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மற்றும் காரைக்கால் இடையே டெமு ரயில் இன்று (ஜூன் 23, 2025) மற்றும் 2025, ஜூன் 25, 26, 27, 28, 29 தேதிகளில் திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் வரை மட்டும் இயக்கப்படும்.

காரைக்கால் – திருச்சி டெமு ரயில் இன்று (ஜூன் 23, 2025) மற்றும் 2025, ஜூன் 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் காரைக்கால் திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மாலை 4.15 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு வந்து சேரும். காரைக்கால் – தஞ்சை பயணிகள் ரயில் இன்று (ஜூன் 23, 2025) மற்றும் 2025, ஜூன் 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் பகல் ஒரு மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு 30 நிமிடம் தாமதமாக தஞ்சை வந்து அடையும்.

மேற்குறிப்பிட்ட இந்த ரயில் சேவை மாற்றங்கள் குறித்த தகவல்கள் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..