Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பராமரிப்பு பணி: எந்தெந்த ரயில்கள் ரத்து..? முழு விவரம் இதோ..!

Tiruppur Railway Maintenance: திருப்பூர் இருகூர்-பீளமேடு இடையே ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருவனந்தபுரம்-மைசூர், கன்னியாகுமரி-திப்ருகர் உள்ளிட்ட பல ரயில்கள் 2025 ஜூலை 10 முதல் 13 வரை போத்தனூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். கோவை ரயில் நிலையத்தை தவிர்த்து போத்தனூரில் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்பு பணி: எந்தெந்த ரயில்கள் ரத்து..? முழு விவரம் இதோ..!
பராமரிப்பு பணிImage Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 09 Jul 2025 08:52 AM

தமிழ்நாடு ஜூலை 09: திருப்பூர் இருகூர்-பீளமேடு இடையே பராமரிப்பு பணிகள் (Maintenance work between Tiruppur Irukur-Peelamedu) நடைபெறுவதால், சில ரெயில்கள் போத்தனூர் வழியாக மாற்றப்பட்டுள்ளன. திருவனந்தபுரம்-மைசூரு, கன்னியாகுமரி-திப்ருகர் ரெயில்கள் (Thiruvananthapuram-Mysore, Kanyakumari-Dibrugarh trains) 2025 ஜூலை 10 முதல் 13 வரை மாற்றுவழியில் இயங்கும். கோவை ரெயில் நிலையத்தை தவிர்த்து, போத்தனூரில் மாற்று நிறுத்தம் செய்யப்படும். மேலும், நீலகிரி எக்ஸ்பிரஸ் (Nilgiri Express) உட்பட பல ரெயில்கள் பாதிக்கப்படும். அரக்கோணத்தில் மின்கம்பி அறுந்ததால், சப்தகிரி, இன்டர்சிட்டி, நாகர்சல் எக்ஸ்பிரஸ் (Saptagiri, Intercity, Nagarsal Express) ஆகிய ரெயில்கள் தாமதமானது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு சேவை பாதிக்கப்பட்டது.

ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள்

திருப்பூர் மாவட்டம் இருகூர் மற்றும் பீளமேடு ரெயில் நிலையங்களுக்கு இடையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், அந்தப் பகுதியில் பயணிக்கும் சில முக்கிய ரெயில்கள் மாற்று வழியாக இயக்கப்படவுள்ளன. அந்த பணிகளை எளிதாக்கும் வகையில், திருவனந்தபுரம்-மைசூரு தினசரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16316) மற்றும் கன்னியாகுமரி-திப்ருகர் எக்ஸ்பிரஸ் (22503) ரெயில்கள், வரும் வியாழக்கிழமை 2025 (ஜூலை 10) முதல் ஜூலை 13-ஆம் தேதி வரை, போத்தனூர்-இருகூர் வழியாக திருப்பி விடப்படுகின்றன. இந்த நாட்களில் கோவை ரெயில் நிலையத்தைத் தவிர்த்து, இந்த ரெயில்கள் போத்தனூர் ரெயில் நிலையத்தில் மாற்று நிறுத்தம் மேற்கொள்ளும்.

Also Read: போராட்டம் எதிரொலி: தமிழ்நாட்டில் இன்று பேருந்து, ஆட்டோ இயங்குமா?

சில ரெயில்கள் மாற்று வழியில் இயக்கம்

அதேபோல், கன்னியாகுமரி-ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா வாராந்திர எக்ஸ்பிரஸ் (16317) 2025 ஜூலை 12-ஆம் தேதி, மற்றும் எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர எக்ஸ்பிரஸ் (22669) ஜூலை 13-ஆம் தேதி, போத்தனூர் வழியாக இயக்கப்பட்டு, அதே நிலையத்தில் மாற்று நிறுத்தம் செய்யப்படும். சென்னை-மேட்டுப்பாளையம் நீலகிரி தினசரி எக்ஸ்பிரஸ் (12671) ரெயில், 2025 ஜூலை 10 முதல் ஜூலை 13 வரை இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்பட்டு, கோவை ரெயில் நிலையத்தை தவிர்க்கும் என சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

அரக்கோணத்தில் மின் கம்பி விழுந்ததால் சேவை பாதிப்பு

இதற்கிடையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, அரக்கோணம்-சென்னை ரெயில் பாதையில் நேற்று காலை உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதுபற்றி தகவலறிந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்று திருத்தப் பணிகளில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குள் மின்கம்பி பழுதுசெய்யப்பட்டது.

மின் கம்பி விழுந்து சேவை பாதிப்பால் பயணிகள் அவதி

இந்தச் சம்பவத்தின் காரணமாக, திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கிச் செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ், கோவையிலிருந்து சென்னைக்கு வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், நாகர்சல்-சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் பாதிக்கப்பட்டு இடைவேளைகளில் நிறுத்தப்பட்டன. பின்னர், சுமார் ஒரு மணி நேர தாமதத்துடன் அவை பயணத்தைத் தொடர்ந்தன. இந்த தாமதம் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே (Southern Railway) என்பது இந்தியாவின் ஆறு மண்டல ரயில்வே பிரிவுகளில் ஒன்றாகும். இது 1951ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சென்னை மாநகரில் தலைமை நிலையம் கொண்ட இது, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளுக்கு சேவையளிக்கிறது. தெற்கு ரயில்வே துறை, பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது. பல்வேறு ரெயில் வழித்தடங்களை பராமரித்து, புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதிலும் இது முன்னிலையில் உள்ளது.