வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் பொளக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்

Chennai Weather Today: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்தள்ளது.

வங்கக் கடலில்  காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் பொளக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்

தமிழகத்தில் மழை

Updated On: 

28 Aug 2025 12:13 PM

 சென்னை, ஆகஸ்ட் 28 : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் (Tamil Nadu Weather Update) தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் முழுவதும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும், தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில்  தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  சென்னையில் தற்போது லேசான மழை அவ்வப்போது பெய்து வருகிறது. மேலும், பகல் நேரங்களில் வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை இங்கு பார்ப்போம்.

அதன்படி,  2025 ஆகஸ்ட் 26ஆம் தேதி ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஒடிசாவை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் 2025 ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read : இரண்டரை வயது மகளை கொலை செய்து நாடகமாடிய தந்தை – மதுரை அருகே பரபரப்பு

தமிழகத்தில் வெளுக்கும் கனமழை

மேலும், 2025 ஆகஸ்ட் 28,29ஆம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 ஆகஸ்ட் 28ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read : இ ரேஷன் கார்டு.. அட்டைதாரரின் புகைப்படத்திற்கு பதில் இருந்த மதுபாட்டில். குடும்பத்தினர் அதிர்ச்ச்சி!

அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் 2025 ஆகஸ்ட் 28ஆம் தேதி ஒருசில இடங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.