இன்று பிச்சு உதறபோகும் கனமழை.. 20 மாவட்டங்களுக்கு அலர்ட்.. சென்னையில் எப்படி?
Tamil Nadu Weather : தமிழகத்தில் 2025 செப்டம்பர் 18ஆம் தேதியான இன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை
சென்னை, செப்டம்பர் 18 : தமிழகத்தில் 2025 செப்டம்பர் 18ஆம் தேதியான இன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை வலு இழந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட மாவட்டங்கள், டெல்டா, தென் மாவட்டங்களில், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் இரவு நேரங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழையே பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், 2025 செப்டம்பர் 18ஆம் தேதியான இன்று நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Also Read : மழைக்கு ரெடியா மக்களே! 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை..
20 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்
DAILY WEATHER REPORT FOR TAMILNADU, PUDUCHERRY & KARAIKAL AREAhttps://t.co/LOvDNF1Sqf pic.twitter.com/paJFj09bds
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) September 17, 2025
2025 செப்டம்பர் 19ஆம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 செப்டம்பர் 22ஆம் தேதி வடதமிழகத்திலும், தென் தமிழகத்திலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : வங்கக் கடலில் காற்றழுத்தம்.. கொட்டப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு அலர்ட்!
மேலும், சென்னையை பொறுத்தவரை, நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும்,, குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.