வங்கக் கடலில் காற்றழுத்தம்.. தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் ஒருசில இடங்களில் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதியான இன்று மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை
சென்னை, ஆகஸ்ட் 15 : தமிழகத்தில் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் (Tamil Nadu Weather) என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் (Chennai Rains) 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி (இன்று) மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக்ததில் கடந்த சில தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. 2025 ஜூலை மாதத்தில் தமிழகத்தில் வெப்பநிலை இருந்தது. ஜூலை மாத தொடக்கத்தில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தது. அதன்பிறகு மாதத்தில் கடைசியில் பரவலாக மழை இருந்தது. அதன்பிறகு, 2025 ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், கொங்கு, டெல்டா மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் முற்றிலுமாக தணிந்துள்ளது.
இதில் சென்னையை பொறுத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் மேக மூட்டத்துடனே இருக்கிறது. இப்படியாகவே, கடந்த சில நாட்கள் இருந்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதாவது, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.
Also Read : வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை
REGIONAL DAILY WEATHER REPORT pic.twitter.com/jsVH2OJGCz
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) August 14, 2025
இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திரா பகுதிகளை கடக்கக் கூடும். மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும். அதாவது, 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
Also Read : வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் வெளுக்கும் கனமழை.. வானிலை அப்டேட்
ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது