பெண் காவலர்களுக்கு விருப்பத்திற்கேற்ப பணி மாறுதல்.. யார் விண்ணப்பிக்க முடியும்?

Maternity Leave Transfers: தமிழ்நாடு அரசு, பிரசவ விடுப்புக்குப் பிறகு பணிக்குத் திரும்பும் 209 பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டங்களில் பணி மாறுதல் வழங்கியுள்ளது. ஜூன் 3, 2025க்குள் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, அனைவருக்கும் மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவு காவல்துறையில் பெண்களுக்கு ஊக்கமளிக்கும்.

பெண் காவலர்களுக்கு விருப்பத்திற்கேற்ப பணி மாறுதல்.. யார் விண்ணப்பிக்க முடியும்?

பெண் காவலர்களுக்கு விருப்பத்திற்கேற்ப பணி மாறுதல்

Published: 

16 Jun 2025 07:41 AM

தமிழ்நாடு ஜூன் 16: மகப்பேறு விடுப்புக்குப் (Maternity leave) பிறகு பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு (Female police officer returns to duty), அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் பணி மாற்றம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் (Chief Minister M.K. Stalin) அறிவித்திருந்தார். இதனடிப்படையில், 209 பெண் காவலர்கள் குழந்தைகளை கவனிக்க வசதியாக மற்ற மாவட்டத்திற்கு இடமாற்றம் கோரி விண்ணப்பித்தனர். 2025 ஜூன் 3ஆம் தேதிக்குள் வந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. அனைத்து 209 பேருக்கும் விருப்பமான மாவட்டங்களில் பணி மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இது பெண்கள் குடும்பச் சூழ்நிலையை புரிந்து கொண்டு அரசு எடுத்த மனிதநேய முடிவாகும். அரசின் இந்த நடவடிக்கை காவல் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

மகப்பேறு விடுப்புக்குப் பிறகு பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள்

பெண்கள் மகப்பேறு விடுப்பு பெற்ற பின்பு மீண்டும் பணிக்கு திரும்பும் கால கட்டத்தில், குழந்தைகளை கவனிப்பதற்கான பொறுப்பும், குடும்ப தேவைகளும் அதிகமாக இருக்கும். இதனை புரிந்துகொண்ட தமிழக அரசு, பெரிதும் பாராட்டப்படத்தக்க ஒரு மனிதநேய முடிவை எடுத்துள்ளது. மகப்பேறு விடுப்புக்குப் பிறகு பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாவட்டத்திலேயே பணி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த காலத்தில் அறிவித்திருந்தார்.

209 பேருக்கு தமிழக அரசு அனுமதி

அந்த அறிவிப்பை தொடர்ந்து, தற்போது வரை, பணி மாறுதல் கோரி விண்ணப்பித்த 209 பெண் காவலர்களுக்கும், அவர்கள் விரும்பிய மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இவர்கள் அனைவரும் தங்களது பேறுகால விடுப்புக்குப் பிறகு, குழந்தைகளின் நலன் கருதி, தற்போது பணியாற்றும் மாவட்டத்திலிருந்து வேறொரு மாவட்டத்திற்கு மாறுதல் கோரியிருந்தனர்.

பெண் காவலர்களுக்கு தமிழக அரசு சிறப்பு சலுகை

பெண் காவலர்களுக்கு விருப்பத்திற்கேற்ப பணி மாறுதல்

இதற்கான விண்ணப்பங்கள் 2025 ஜூன் 3ஆம் தேதிக்குள் பெறப்பட்டன. அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, அந்த 209 பேருக்கும் விருப்பமான மாவட்டத்திலேயே பணி மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, அதிகாரப்பூர்வ உத்தரவின்படி உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பெண் காவலருக்கு பெரிய ஒத்துழைப்பாக இருக்கும் அறிவிப்பு

பெண்கள் காவல்துறையில் பணிபுரியும் சூழ்நிலைகளை மனமுவந்து புரிந்து கொண்டு, குடும்ப மற்றும் குழந்தை பராமரிப்பு பிரச்சனைகளை நீக்கும் வகையில் தமிழக அரசு எடுத்துள்ள இந்த தீர்மானம், அனைத்து தரப்பிலும் பாராட்டைப் பெற்றுள்ளது. இது மாதிரியான தீர்மானங்கள், வேலை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு சமநிலை தேடும் மகளிருக்கு பெரிய ஒத்துழைப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.