தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு.. காலையில் பனியும் இருக்கும்.. வானிலை ரிப்போர்ட் இதோ..

Weather Forecast: தமிழகத்தில் இன்று கிருஷ்ணகிரி, திருப்​பத்​தூர், வேலூர், ராணிப்​பேட்​டை, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் இன்று ஓரிரு இடங்​களில் அதி​காலை நேரத்​தில் மித​மான பனிமூட்​ட​மும் ஈரோடு, சேலம், நாமக்​கல், திருச்​சி, கரூர் மாவட்​டங்​களில் லேசான பனிமூட்​ட​மும் காணப்​படும். என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு.. காலையில் பனியும் இருக்கும்.. வானிலை ரிப்போர்ட் இதோ..

கோப்புப் புகைப்படம்

Updated On: 

01 Feb 2026 06:32 AM

 IST

சென்னை, பிப்ரவரி 01: தமிழகத்​தில் இன்று (பிப்​.1) ஓரிரு இடங்​களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. லட்​சத்​தீவு, கேரளா மற்​றும் அதையொட்​டிய தென்​கிழக்கு அரபிக்​கடல் பகு​தி​களில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்​றில் வேக மாறு​பாடு நில​வு​கிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவிய நிலையில், நேற்றைய தினம் ஓரு சில இடங்களில் மழை பெய்தது.

இதையும் படிக்க : தவெக தேர்தல் பிரசார சட்ட பாதுகாப்பு குழு…34 பேர் கொண்ட டீமை இறக்கிய விஜய்!

இன்றைய வானிலை நிலவரம்:

இந்நிலையில், இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்திகுறிப்பில், தமிழகத்​தில் இன்று (பிப்​.1) ஓரிரு இடங்​களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதோடு, கிருஷ்ணகிரி, திருப்​பத்​தூர், வேலூர், ராணிப்​பேட்​டை, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் இன்று ஓரிரு இடங்​களில் அதி​காலை நேரத்​தில் மித​மான பனிமூட்​ட​மும் ஈரோடு, சேலம், நாமக்​கல், திருச்​சி, கரூர் மாவட்​டங்​களில் லேசான பனிமூட்​ட​மும் காணப்​படும். என்று தெரிவித்துள்ளது.

வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு:

தொடர்ந்து, பிப்ரவரி 2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களி​லும், 3ஆம் தேதி கடலோர மாவட்​டங்​களி​லும், 4ஆம் தேதி தமிழகத்​தில் சில இடங்​களி​லும், 5ஆம் தேதி ஓரிரு இடங்​களி​லும், 6ஆம் தேதி தென் தமிழகம் மற்​றும் டெல்டா மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும் லேசான மழை பெய்​யக்​கூடும் என்று முன்னறிவித்துள்ளது. அதேசமயம், வரும் 2, 3, 4-ம் தேதி​களில் கிருஷ்ணகிரி, திருப்​பத்​தூர், வேலூர், ராணிப்​பேட்டை மற்றும் திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் அதி​காலை நேரத்​தில் மித​மான பனிமூட்​டம் காணப்​படும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். அதி​கபட்ச வெப்​பநிலை 30 டிகிரி செல்​சி​யஸ், குறைந்​த​பட்ச வெப்​பநிலை 22 செல்​சி​யஸ் அளவில் இருக்​கும் என்று குறிப்பிட்டுள்ளது. மீனவர்களுக்கு இன்று முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : மத்திய அரசின் அறிக்கையையே பிரதமரும் ஆளுநரும் படிக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

கடந்த 24 மணி நேரத்​தில்:

தமிழகத்​தில் ஜன.31-ம் தேதி (நேற்​று) காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் திருத்​தணி​யில் 16.5 டிகிரி செல்சியஸ், மலைப் பகு​தி​யான ஊட்​டி​யில் 6.4 டிகிரி செல்​சி​யஸ் வெப்​பநிலை பதி​வானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் யார் தலைமை பொறுப்பை ஏற்பார்?
அஜித் பவாரின் விமான விபத்துக்கு முன் விமானி அனுப்பிய குட் மார்னிஹ் மெசேஜ் - நெகிழ்ச்சி சம்பவம்
குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் - இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி
இந்த ஜப்பானின் கருப்பு முட்டையை சாப்பிட்டால் ஆயுள் 7 ஆண்டுகள் அதிகரிக்குமா?