AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேமுதிகவில் இருந்து விலகுவதாக மீசை ராஜேந்திரன் அறிவிப்பு.. சீட் தராததால் அதிருப்தி என தகவல்..

தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான மீசை ராஜேந்திரன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், “கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டுகளும், தேமுதிகவில் 21 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளேன். ஆனால் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேமுதிகவில் இருந்து விலகுவதாக மீசை ராஜேந்திரன் அறிவிப்பு.. சீட் தராததால் அதிருப்தி என தகவல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 08 Apr 2026 16:43 PM IST

சென்னை, ஏப்ரல் 8, 2026: முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான மீசை ராஜேந்திரன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை பொதுச் செயலாளர் பிரேமலதாவிற்கு அனுப்பியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில், தேமுதிக முதல் முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவிற்கு 10 சட்டமன்ற இடங்களும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது.

தேமுதிகவிற்கு, விஜயகாந்த் மறைவுக்குப் பின் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக போட்டியிட்டாலும், ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேமிதிகவில் இருந்து விலகும் மீசை ராஜேந்திரன்:

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவிற்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தற்போது கட்சி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் படிக்க: தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி..

இந்த சூழலில், தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான மீசை ராஜேந்திரன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், “கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டுகளும், தேமுதிகவில் 21 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளேன். ஆனால் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சீட் தராததால் அதிருப்தி:

தேமுதிக சார்பில் மூன்று முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இவருக்கு, இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததே அவர் இந்த முடிவை எடுக்க காரணமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீசை ராஜேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது, கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: கிடைத்தது அனுமதி… விஜய் பேச்சுக்கு தயாராகும் கடலூர்… நாளை பிரம்மாண்ட பரப்புரை!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் ஒரு பக்கம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில் தேமுதிகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிரச்சினையும் வெளிச்சத்துக்கு வந்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us