AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும் ?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும் ?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Jun 2026 14:53 PM IST

ஜூன் 16, 2026: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. அந்த வகையில், சுமார் 3.1 கி.மீ உயரத்தில் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து கேரள கடலோர பகுதிகள் வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக, ஜூன் 16ஆம் தேதியான இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

ஜூன் 17ஆம் தேதியைப் பொருத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 18ஆம் தேதியைப் பொருத்தவரையில், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 22ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு:

ஜூன் 19ஆம் தேதியைப் பொருத்தவரையில், தெற்கு கடலோர தமிழகத்தில் மிதமான மழை இருக்கக்கூடும் என்றும், ஏனைய தமிழக முழுவதும் லேசான முதல் மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 22ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பெற்றோர்களே கவனிங்க.. ஸ்காலர்ஷிப் லிங்க் வந்தால் க்ளிக் செய்யாதீங்க.. பரவும் நூதன மோசடி!

அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், ஒரு சில இடங்களில் சற்று உயரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us