அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை.. எத்தனை நாட்களுக்கு?
Tamil Nadu Weather Update: வங்கக் கடலில் - காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காரணமாக நவம்பர் 17, 2025 (இன்றைய தினம்) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், நவம்பர் 17, ,2025: நவம்பர் 16, 2025 தேதியான நேற்று, இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியிலும் அதனை ஒட்டி இலங்கை கடலோரப் பகுதிகளிலும் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு–வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, வரும் நவம்பர் 22, 2025 அன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது அடுத்து 48 மணி நேரத்தில் மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்:
வங்கக் கடலில் – காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காரணமாக நவம்பர் 17, 2025 (இன்றைய தினம்) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 18, 2025 நாளை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 19, 2025 அன்று மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடரும் கனமழை:
அதேபோல் நவம்பர் 20, 2025 அன்று மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், நவம்பர் 21, 2025 அன்று மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: ‘அதீத பணி நெருக்கடி’.. தமிழ்நாட்டில் நாளை முதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு!!
நவம்பர் 22, 2025 அன்று வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 23, 2025 அன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.